வெள்ளி, 27 மே, 2011

உயிரானவள்...


பெண்ணே!

உன்னை நிலமென்றால்

பூரித்துப் போகதே….!

அவன் என்றும் உன்னை

தன் கால்களுக்கு

கீழே வைக்க சதி செய்துவிட்டான்

எனப் புரிந்து கொள்!


பெண்ணே!

உன்னை நிலவென்றால்

குளிர்ந்து போகாதே!

அவன் என்றும் உன்னை

தன் இரவின் துணையாக்கி

காமத்திற்கு இரையாக்க முடிவுசெய்துவிட்டான்

எனப் புரிந்து கொள்!


பெண்ணே!

உன்னை நீரென்றால்

உருகிப் போகாதே!

அவன் என்றும் உன்னை

தன் தேவைக்கு பருக

உன் சுதந்திரத்திற்கு அணைகட்ட துணிந்துவிட்டான்

எனப் புரிந்து கொள்!


பெண்ணே!

உன்னை மலரென்றால்

மலர்ந்து போகாதே!

அவன் என்றும் உன்னை

தன் உடைமைகளில் ஒன்றாக்கிக்கொள்ள

உன்னை காம்பறுக்க போகிறான்

எனப் புரிந்து கொள்!


பெண்ணே!

நீலமாய்…..

நிலவாய்….

நீராய்….

மலராய்….

அவன் என்றும் உன்னை

வர்ணிப்பது….. நீ!

உயிராய் வாழ்வதையே உன்னை

மறக்க செய்வதற்கே….

எனப் புரிந்து கொள்!

உன் வாழ்வை உனக்கென

மாற்றிக்கொள்!!!!

கருத்துகள் இல்லை: