புதன், 4 நவம்பர், 2015

தாம்பத்தியம்



தனிமை என்பது இன்பம்தான் – அதனை

திருமணம் தகர்தெரியும் போது

பேரின்பம் பிறக்கின்றது…

ஆம்! பேரின்பம் தான்…


மலர் தூவிய ராஜபாட்டையில்

இனிய உளவாக சிறுமுட்கள்

இடரும் போது….

ஊடல் பேரின்பம்தான்!!!


அலுத்து ஓய்ந்த இரவில்

ஆறுதல் ஒத்தட மிடும்

உதடுகள் பேரின்பம்தான!!!


அடைகாத்த  சிறகுகளை

அடமானமாய் கேட்கும்போது

சிறகற்று விரியும்

புதுவானம் பேரின்பம்தான்!!!


இனியநினைவுக் கண்ணாடி முன்-

நின்று கொள்ளுங்கள்… தாம்பத்தியம்!!!

காலத்தை வென்ற செருக்கோடு

நிலைத்துப் போகும் பேரின்பங்கள்!!!

நினைவுகள்…



பறவை போல் இருக்கிறாய்
இரவெல்லாம் பறக்கிறாய்
நெருங்கினால் எரிகிறாய்- நீ யாரோ?

மேகக் கூட்டம்
புணரும் வானில் தரிக்கிறாய்
கரையில் மோதும்
கடலின் அலையில் எழுகிறாய்
மலையில் வீசும்
தென்றல் காற்றில் மலர்கிறாய் - நீ யாரோ?

என்னை துரத்தும் பொழுதிலே
உன்னை தொலைத்து விடுகிறாய்
எனக்குள் இருக்கும் உன்னை
வெளியில் தேட சொல்கிறாய்
காற்றின் கரங்கள் பற்றியிழுக்க
மறுந்து மீண்டும் இணைகிறாய்- நீ யாரோ?

மரணம் வீழ்த்தி பிறக்கிறாய்
மீண்டும் மீண்டும் வருகிறாய்
உறங்கும் போதும் வருகிறாய்
உறங்க விடாமல் தடுக்கிறாய்
விழித்துக் கொண்டால் மடிகிறாய்
மடிந்தும் மீண்டும் துளிர்கிறாய்- நீ யாரோ?