தனிமை
என்பது இன்பம்தான் – அதனை
திருமணம்
தகர்தெரியும் போது
பேரின்பம்
பிறக்கின்றது…
ஆம்!
பேரின்பம் தான்…
மலர்
தூவிய ராஜபாட்டையில்
இனிய
உளவாக சிறுமுட்கள்
இடரும்
போது….
ஊடல்
பேரின்பம்தான்!!!
அலுத்து
ஓய்ந்த இரவில்
ஆறுதல்
ஒத்தட மிடும்
உதடுகள்
பேரின்பம்தான!!!
அடைகாத்த சிறகுகளை
அடமானமாய்
கேட்கும்போது
சிறகற்று
விரியும்
புதுவானம்
பேரின்பம்தான்!!!
இனியநினைவுக்
கண்ணாடி முன்-
நின்று
கொள்ளுங்கள்… தாம்பத்தியம்!!!
காலத்தை
வென்ற செருக்கோடு
நிலைத்துப்
போகும் பேரின்பங்கள்!!!