சனி, 30 ஏப்ரல், 2011

என் காம சுவடுகள்...


நிலைகுலையா காமம்

நிதானம் இழப்பதும்

ஒரு சுகம் தான்

அவளது நிந்தனைகள்

என்னை காமுறச் செய்யுமானால்.


இதயத்தின் யாசகம்

இதழ்கள் மோதும் நேரத்தில்-என்

இதயம் இடும் கூச்சல்- என்னை

இம்சிக்கின்றது மீண்டும் மீண்டும்

இன்னொருமுறை வேண்டு மென்று.


நிலவு சாட்சி

நிலைவை சாட்சியாக்கி

அவள் இதழ்களில் முத்தமிட்டேன்

நிலவு வெட்கி மறைந்தது-அது

அமாவாசையாம்!


வேண்டுதல்

வேண்டா வெறுப்பாய்

வேண்டு மென்றே விலகிச் சென்றேன்

அவள் மீண்டும் என்னை

வேண்டி இழுக்க வேண்டிக் கொண்டு.


அசாத்தியமான சாத்தியங்கள்…

அது எப்படி சாத்தியமாகிறது…?

அவள் என்னிடம் பேசிவிட்டு

‘சென்ற பின்னும்

அவள் மௌனங்கள் என்னை இம்சிக்கிறதே!

அது எப்படி சாத்தியமாகிறது…?

அவள் என் அருகில் இல்லாமல்

அவள் என் நினைவுகளைக் கொண்டே

என்னை தீண்டுகிறாளே!

அது எப்படி சாத்தியமாகிறது…?

அவள் தன் ஆடைகளை

களைந்த பின்பும்

அது அவள் அவயங்களை சுமக்கிறதே!

அது எப்படி சாத்தியமாகிறது…?

அவள் போதும் என்று

என்னை விலகி சென்ற பின்னும்

அவள் விரல்கள் என் தலை கோதுகிறதே!

கருத்துகள் இல்லை: