
காமுறச் செய்யும் காதல்
கண்ணீர் சுரக்கவும் சொல்கிறதே…?
தியாகம் பயிற்றும் காதல்
கோபப் படவும் வைக்கிறதே….?
அக்கறை காட்டும் காதல்
நிராகரிப்பும் செய்கிறதே…?
அள்ளி அணைக்கும் காதல்
கொள்ளி வைக்கவும் துணிகிறதே…?
காதல் ஒரு புரியாத புதிர் தான்…..
கண்ணில் நுழைந்த காதல்
இதயம் சென்றபின் பார்வை இழக்கிறது.
பார்வை இழந்த காதல்
ஆசைகளின் கைப்பிடித்து கொள்கிறது.
காற்றில் மிதக்கும் இறகினைப் போல்
காதல் மிதக்க செய்கிறது.
காதல் மிதப்பில் நம் கால்களைக் கூட
மறந்து போகிறோம்.
அதனால் தானோ....
காதலில் விழுந்தவர்கள்
மீண்டும் எழுவதில்லை....?
காதல் ஒரு புரியாத புதிர் தான்…..
மனிதனைத் தவிற வேறு எந்த உயிரும்
இதனைச் செய்வதில்லை.
நேசிக்கப்பட்டவர்களால்
நிராகரிக்கப் பட்ட பின்னும்…..
அரவணைக்கப்பட்டவர்களால்
தனிமை படுத்தப்பட்ட பின்னும்….
பிரியத்துக்குரியவர்களால்
பிரிவு பரிசளிக்கப்பட்ட பின்னும்….
காதல் ஒரு புரியாத புதிர் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக