சனி, 9 ஏப்ரல், 2011

நானும் அவளும்...

காதல் ”ரசவாதம்”



பாலும்,தேனும்

கலந்து தந்தாள்

பருகும் முன்

பறித்துக் கொண்டாள்

ஏமாற்றத்தோடு அவளை ஏறிட்டேன்

ஏளனப் பார்வையோடு

புன்னகைத்தாள்.

உதடுகளைக் குவித்து……

ஏங்கச் செய்தபடி

பாலினைப் பருகினாள்

என்னைப் பார்த்து சிரித்தபடி

தம்ளரை கவிழ்த்தாள்.

நான் பாய்ந்து சென்று

அவள் உதட்டில்

உறைந்து நின்ற பாலின்

ஒரு துளி மிச்சத்தை சுவைத்தேன்….

தேனும் பாலும் அவள் உதட்டில்

கள்ளாய் மாறும் ’ரசவாதம்’ தெரியாமல்!!!!


ஊடல்

எப்படி ஆரம்பித்தது என்று தெரியாமல்

நானும் அவளும்

சண்டையிட்டு கொண்டிருந்தோம்…..

வார்த்தைகள் தடித்து கண்ணீர் வெடித்து

கிளம்பிய அந்த தருணத்தில்….திடீரென்று

கோபம் மறைந்து காமம் பூத்தது

அவளை இழுத்து பிடித்து

உப்பிலிட்ட நெல்லிக்கனியை போல் இருந்த

அவளது கன்னங்களை சுவைக்க துவங்கினேன்…..

கோபமாக என்னைப் பிடித்து தள்ளினாள்

அதிர்ச்சியில் ஒரு கணம்

அவமானப்பட மறந்து நின்றேன்.

என் அதிர்ச்சி விலகுமுன்….

என்னை தன் பக்கம் இழுத்து பிடித்து

சுவைக்கத்துவங்கினாள்.


வேண்டப்பட்ட வீழ்ச்சி

குளித்து முடித்து நீர் சொட்ட

வந்து நின்றாள்- வழக்கம்போல்

நான் நிலை தடுமாறத்

துவங்கியிருந்தேன்- ஆனால்

வெளிக்காட்டிக் கொள்ளவில்லை

அவளும் என்னை

சட்டை செய்யாதவளைப் போல்

சீண்டத் துவங்கி யிருந்தாள்.

நான் என் புலன்களை

கட்டுப்படுத்தும் முயற்சியில்

தோற்றுக் கொண்டிருக்கையில்……

என் அருகே வந்தவள்

தன் கூந்தல் கொண்டு

என் முகத்தில் நீரை அடித்துவிட்டு

திரும்பிச் செல்ல முயல்கையில்

அவளது மயிற்றின் நுனியில்

நான் சிக்குண்டிருந்தேன்.

அவள் தன் மயிற்றில் கட்டி

என்னை இழுத்துச் சென்றாள்.

நான் சென்று விழுந்தேன்.

அவளும் என் வீழ்ச்சியில்

பங்கு கொண்டாள்

என்னை மீண்டும் வீழ்த்த….

நானும் சளைக்காமல்

அவளை பதிலுக்கு வீழ்த்த

இறுதியில் இருவரும் வீழ்ந்து போனோம்.

வீழ்ந்தவர்கள் எழுவது தானே இயற்கை…?

ஆம்…!

அவளும் என்னோடு எழுந்து கொண்டாள்

மீண்டும் குளிப்பதற்கு!

3 கருத்துகள்:

சாமக்கோடங்கி சொன்னது…

எளிமையான வரிகள்... கவிதையில் காம ரசத்தைப் பிழிந்துள்ளீர்கள்...

vimalanperali சொன்னது…

வீட்டுக்கு வீடு வாசப்படி.இதயங்கள் ஆசையின்படி.

Unknown சொன்னது…

தங்களது வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சாமக்கோடாங்கி...

நன்றி அண்ணா....