புதன், 2 பிப்ரவரி, 2011

நலமான பொய்கள்

பொய்கள் பல சமயங்களில்

நிஜங்களை விட நல்லவைகளாகி

போய்விடுகிறது.

ஆம்!

நெஞ்சை கிழிக்கும் நிஜங்கள்

இனிய உளவாக இல்லாமல்

போவதும் இயற்கை தானே!

இங்கு பொய்களுக்காக பரிந்துபேசி

நிஜங்களை வெறுக்க கற்றுக்

கொடுக்க வரவில்லை-ஆனால்

வலித்து வலித்து மரத்துப்போன

ஒரு இதயத்தில்

சிறு தளிராய் முளைவிடும்

சிறுதுளி நம்பிக்கையை கூட

நிஜங்களை கொண்டு

பிடிங்கி எறிவது எப்படிச் சரியாகும்…?

நிஜங்கள் நெஞ்சத்து நம்பிக்கையை

சிதைக்கும் போது……

பொய்கள் நெஞ்சிற்கு அரண்களாகி

நிஜங்களை வெறுக்க துணைபோகிறது.

ஆம்!

எல்லாம் இழந்த இதயத்திற்குத் தான்

தெரியும் பெரும் வலிதரும்

நிஜங்களைவிட

சிறு ஆறுதல் தரும் பொய்கள்

அதனினும் மேலானவை என்று…….

1 கருத்து:

காமராஜ் சொன்னது…

மாப்பிள்ளை கவிதை படித்தேன்.