செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மலரின் நிழலைத் தேடி....

பயணங்கள் நமக்கு புதிதல்ல…..

வாழ்க்கை என்பதே ஒரு

தொடர் பயணம் தானே!

சில பயணங்கள்……

இறுதியிட்ட இலக்கை நோக்கி

இருக்கும்.

சில பயணங்கள்……

இலக்குகளை இறுதி செய்யாமல்

இருக்கும்.

என் பயணத்திற்கோ…

நோக்கம் உண்டு- ஆனால்

திசைகள் தெரியாது.

பயணத்திற்கான நோக்கம் இருந்தும்

திசைகள் தெரியாதது

விந்தையாக தோன்றலாம்.

இதில் விந்தை எதுவும் இல்லை

காரணம் என் பயணத்திற்கான

நோக்கம் அப்படியானது…..

ஆம்!

தன் இதழ்களை உதிர்த்துவிட்ட

மலரின் நிழலைத்தேடி நான்

இருளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

மலர்கள் அழகானவைதான் –ஆனால்

காற்று அதை உணர்வதில்லை

அதற்காக காற்றை குற்றம் சுமத்தமுடியாது.

ஏனென்றால் காற்றுக்கு தெரிவதில்லை

தான் மலர்களுக்கு காலனாய்

மாறிப்போவது.

அதுமட்டுமின்றி……

என் மலரின் சுவாசம்

இப்போது

அந்த காற்றில் கலந்துவிட்டது.

காற்றில் கலந்துபோன என் மலரின்

சுவாசத்தை வாடை பிடித்துக்கொண்டு-என்

மலரின் நிழலைத்தேடி பயணிக்கிறேன்.

1 கருத்து:

காமராஜ் சொன்னது…

மாப்ளே திரும்பி வந்துட்டியா ?
கவிதை நல்லாஇருக்கு.
இன்னும் கூடுதலா செதுக்கலாம்.