வியாழன், 23 ஏப்ரல், 2009

சுத்தத் தமிழன்


IPL கிரிக்கெட் போட்டிகளை பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டு இருக்கும் போது தெரியாமல் ரிமோட்டில் என் விரல் பட்டு ஏதோ ஒரு செய்தி சேனலுக்கு மாறிவிட்டது .அதில், ஏதோ இலங்கை என்றொரு நாடு உள்ளதாமே அங்கு ஏதோ தமிழினம் அழிந்து கொண்டு வருவதாகவும் ,பிரபாகரன் சீக்கிரத்தில் பிடிபடுவார் என்றும்,விடுதலைப்புலிகள் கதை முடிந்து விடும் என்றும் செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.கிரிக்கெட்டை விட இது சுவாரஸ்யமாக இருந்தது இப்போது, ஆனாலும் பரபரப்பான மேட்சை பாதியில் விட முடியாதல்லவா?மீண்டும் setmax மாற்றி மேட்சில் முழ்கினேன்.பரபரப்பான போட்டியில் chennai superkings தோற்றுப்போனது எனக்கு மிகவும் கவலை அளித்தது.என்ன இருந்தாலும் நானும் ஒரு தமிழன் அல்லவா?

கருத்துகள் இல்லை: