புதன், 15 ஜூலை, 2009

வாங்க...சிரிங்க...


சமீபத்தில் நான் ரசித்து படித்த சில குறுஞ்செய்திகள்......இந்த பதிவின் நோக்கம் இதை படிப்பவர்களை சிரிக்க வைப்பது மட்டுமே அதனால் இதில் தத்துவார்த்த குற்றங்களை கண்டுபிடித்து யாரும் கெட்ட வார்த்தையில் பின்னூட்டம் போட வேண்டாம்...

***ஆதாமும்,ஏவாளும் சீனர்களாக பிறந்திருந்தால் என்னவாகியிருக்கும்...?

நாம் இன்னும் ”ஏதேன்” தோட்டத்தில் தான் வாழ்ந்திருப்போம்.ஏனென்றால் அவர்கள் பழத்தை விட்டு விட்டு பாம்பை தின்றிருப்பார்கள்.

***தேன் சொன்னது,” நான் தான் இந்த உலகத்திலே அதிகம் சுவை படைத்தவன்”

கடவுள் சிரித்தவாறே பதிலுரைத்தார்,”அவசரப்படாதே! நீ இன்னும் இந்த குறுஞ்செய்தியை படிப்பவரை பார்க்கவில்லை அதனால் தான்
இப்படி சொல்கிறாய்..”என்றார்.
( நீதி: கடவுளும் சில சமயங்களில் பொய் சொல்வது உண்டு...)

***ஒரு குட்டிச் சாத்தான் என்னிடம் ,” நான் யாரையாவது தொந்தரவு செய்ய வேண்டும்.”என்றது.

நான் உன் பெயரை சொன்னேன்.அது ஓங்கி என் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னது,” நாங்கள் எங்கள் தலைவரிடம் அப்படி
விளையாடுவதில்லை..” என்று.

***ஓர் அற்புதமான வாக்கியம்.... நெடுஞ்சாலை பெயர் பலகையில் இப்படி இருந்தது.,”மிஸ்டர்.லேட் என்பது லேட்.மிஸ்டர் என்பதை விட
சிறந்தது.” அதனால் மித வேகம் மிக நன்று...

***கண்டக்டர்: டிக்கெட் பரிசோதகர் வருகிறார்...எல்லோரும் அவரவர் டிக்கெட்டை காண்பியுங்கள்.

மாணவ பயணி: முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல சார்.போன ஸ்டாப்ல தான் என்னோட டிக்கெட் இறங்கி போச்சு.

***மனைவி:என்னங்க! ”பின்னாடி FIGURE இருந்தா கண்ணு தெரியாதா”..ன்னு லாரிகாரன் உங்கள திட்டிட்டு போறான். நீங்க சிரிக்கிறீங்க?

கணவன்:பின்ன சிரிக்காம என்ன பண்றதாம்.உன்னை போய் FIGURE ன்னு சொல்றானே குருட்டுப் பய....

***ஒரு சர்தார்ஜியிடம் நேர்முக தேர்வின் போது......

மேலாளர்: உங்களது பிறந்த தேதி என்ன?
சர்தார்ஜி : ஏப்ரல் 25ஆம் தேதி.

மேலாளர்: எந்த வருடம்?
சர்தார்ஜி : என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி இது...ஒவ்வொரு வருடமும் தான்.

கடைசியாக இரு அஜால் குஜால் குறுஞ்செய்திகள்.......

*** 90 வயது முதியவர் ஒருவர் மருத்துவரிடம் வருகிறார்.....

முதியவர்:ஐயா! இந்த வயதில் நான் எந்த கோணத்தில் உடலுறவு கொள்வது நல்லது?

மருத்துவர்: நாய்கள் செய்வது போல்.....(அவர் முடிக்கும் முன்பு)

முதியவர்:அதாவது பின்னாலிருந்தா...?

மருத்துவர்:இல்லை இல்லை... நாய்களை போல் என்றால்....அவைகளை முகர்ந்து விட்டு மட்டும் செல்வதே நல்லது என்று சொல்ல
வந்தேன்.

***குற்ற உணர்ச்சியின் உச்ச கட்டம் எது...?
இரவு உறக்கத்தில் மனைவியின் உளறல்...”சீக்கரம் என் புருஷன் வந்திட்டார்....”
பக்கத்தில் படுத்து இருந்தவர் அவசரமாக ஜன்னல் வெளியே குதித்து விட்டு...”ஐயோ! இது என்ன மடத்தனம் பக்கத்திலிருந்தது என்
மனைவியல்லவா...”என்று தாமதமாக உணர்வது.

வெள்ளி, 10 ஜூலை, 2009

நான் பேசுகிறேன்....


தொடர்ந்து எங்கள் வங்கி நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை எதிர்த்து எங்களது தொழிற்சங்கத்தின் சார்பில் இயக்கங்கள் நடந்து வருவதால் ஒரு சிறு இடைவேளை விழுந்து விட்டது.இந்த இடைவேளையில் ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன.சரி ஒவ்வொன்றாய் பார்போம்....

***இந்திய அரசின் குற்றவியல் சட்டம் 377-ன் கீழ் ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு முரணானது என தண்டிப்பது அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்ற (இந்திய) வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.பாராட்டுக்குறியது.

மேலை நாடுகளில் ஓரின ஜோடிகள் சட்டப்பூர்வமாக பதிவு செய்வது நடைமுறையில் இருந்தாலும் கலாச்சாரம்,கருமாந்திரம் என உளரி கொட்டும் மூடர்கள் நிறைந்த நமது தேசத்தில் இந்த தீர்ப்பு நீதிமன்றங்களின் மேல் மரியாதையை அதிகரிக்க செய்கிறது.

இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த தீர்ப்பு வந்த தினமே இந்திய ஓரினத் தம்பதிகளின் சுதந்திர தினம் ”.

***நீதிபதி ரகுபதி தன்னை ஒரு மத்திய அமைச்சர் அவருக்கு வேண்டிய ஒருவருக்கு ஜாமீன் தரச் சொல்லி மிரட்டியதாக பகிரங்கமாக சொன்னது நாடு தழுவிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் சாமான்யர்களின் நம்பிக்கைச் சின்னங்கள்.

அப்படிப்பட்ட நீதிமன்றங்களை ஆளும் நீதிபதிகளை மிரட்டியோ அல்லது வேறு வகையிலோ அடிபணிய வைக்க முடியும் என ஒருவர் நினைக்கிறார் என்றால் அவர் தன்னை சர்வாதிகாரியாக கருதுகிறார் என்றே அர்த்தம்.அப்படிப்பட்ட ஒருவர் மக்கள் பிரதிநிதி என்ற போர்வையில் ஒளிந்திருப்பது நம் ஜனநாயகத்திற்கே ஆபத்தானது.

அந்த ஜனநாயக விரோதியை அடையாளம் காட்டத் தவறுவது குற்றத்திற்கு துணை போவதற்கு சமம்.ஆகவே தன்னை மிரட்டியவரை மக்கள் மன்றத்திற்கு முன் அம்பலப்படுத்துவது நீதிபதி ரகுபதியின் ஜனநாயக கடமை.

***அவனது திறமையாலும்,விடா முயற்சியாலும்,தன்நம்பிக்கையாலும் அவனை நிராகரித்தவர்களும்,வெறுத்து ஒதிக்கியவர்களும் கூட அவனை கொண்டாட செய்தான்.

ஐந்து வயதிலே தொழில்முறை நடனக்குழுவிற்கு வந்து தன் குழந்தைபருவத்தை தொலைத்தவன்.அதை மீட்டெடுக்கும் விதமாக 2700 ஏக்கர் பரப்பளவில் கலிபோர்னியாவில் நெவர்லேண்ட் ராஞ்ச் என்னும் குழந்தைகளுக்கான மாளிகை கட்டி அதில் தானும் ஒரு குழந்தையாக வாழ முயற்சித்தான்.ஆனால் சில சுயநல விஷமிகளால் வீண் பழிக்கும் கடும் விமர்சனங்களுக்கும் ஆளான போதும் அவனை கோடிக்கணக்கான இதயங்கள் நேசிக்கவே செய்தன.

உலகின் எல்லா மூலைக்கும் தன் இசைதிறமையாலும், நடன அசைவுகளாலும் அவன் அறிமுகமாகி புகழும்,பணமும் அவனை வந்து சேர்ந்த போதும் அவன் நாடியது தனிமையும், நிம்மதியுமே. நிம்மதியாய் துயில மாத்திரைகள் வாங்கினான் அவன் உயிரை விலையாய் கொடுத்து.

ஆம்!இப்போது நிம்மதியாய் துயில்கிறான்.....மைக்கேல் ஜாக்சன்

திங்கள், 8 ஜூன், 2009

நவீன கொத்தடிமைகள்.....


நேற்று எனது தொழிற்சங்க வாழ்வில் ஒரு முக்கியமான நாள். எங்களது பாண்டியன் கிராம வங்கியில் (முற்றிலும் மத்திய அரசிற்கு சொந்தமானது)இருநூற்றி ஐம்பதிற்கும் மேலான தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்கள் கிளைகளில் நிரந்தரப் பணியாளர்களான நாங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வார்கள்(சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் செய்யும் வேலைகளில் பாதியளவு கூட நாங்கள் செய்வது இல்லை).

ஆனால் அவர்களுக்கு நாள் ஒன்றிற்கு ஐம்பது முதல் நூறு ருபாய் வரை என வாரக்கூலி வழங்கப்படுகிறது.அவர்களுக்கு பணிபாதுகாப்பு கிடையாது.(மேலாளர்களோ அல்லது உடன் புரியும் எவரேனும் நினைத்தால் எந்த முகாந்திரமும் இன்றி எந்த நிமிடமும் அவர்களை வேலையிலிருந்து நீக்க முடியும்).

அவர்கள் பணிபுரியும் கால நேரம் என்பது நாள் ஒன்றிற்கு 10 முதல் 12 மணி நேரம் வரையாகும்.தேவைப்பட்டால் மேலாளர் அவர்களை விடுமுறை நாட்களிலும் வருவிப்பார்.அவர்கள் பதிலேதும் பேசாமல் வரவேண்டும் இல்லையேல் வேலை காலி.அவர்கள் ஒரு நாள் வேலைக்கு வரவில்லை என்றாலும் அவர்களுக்கு சம்பளம் கிடையாது.மேலும் லீவு(ஞாயிற்றுக்கிழமை உட்பட) நாட்களில் அவர்களூக்கு சம்பளம் கிடையாது.

இந்த உழைப்பு சுரண்டல் எல்லாம் செய்யும் எங்கள் நிர்வாகமே தந்திரமாக மேலாளர்களிடம் ஒவ்வொரு மாதமும் தற்காலிகப் பணியாளர்கள் யாரும் அந்தந்த வங்கியில் இல்லை என (போலி) சான்றிதல் வாங்கிவிடும்.மேலாளர்களும் அப்படியே செய்திடுவர்.

வருகைப் பதிவேடுகளிலோ அல்லது அவர்களுக்கு வழங்கும் சம்பளச் சீட்டுகளிலோ தற்காலிகப் பணியாளர்களின் கையொப்பம் வராமல் பார்த்துக் கொள்வர். நபார்டிலிருந்தோ(NABARD) அல்லது வேறு மத்திய சர்காரின் ஆய்வுத்துறையிலிருந்தோ எவரேனும் வந்தால் அந்த தற்காலிகப் பணியாளர்களை அவர்களின் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்வர்.

ஆம்! இப்படியாக அவர்கள் நவீன கொத்தடிமைகளை உருவாக்கும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இப்படியொரு சூழலில் தான் இந்த கொடுமைகளை காணச் சகியாது எங்கள் தொழிற்சங்கம் (PGBEA-PANDYAN GRAMA BANK EMPLOYEES ASSOCIATION) இதை மேலும் வளர விடக்கூடாது என முடிவு செய்தது.முதற் கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள எங்கள் வங்கிக் கிளைகளில் பணிபுரியும் அத்துணை தற்காலிகப் பணியாளர்களையும் விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்கத்தில் நேற்று ஒன்று திரட்டியது.அதில் நூற்றி அறுபதிற்கும் மேலான இளம் தற்காலிகப் பணியாளர் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.அதில் பெரும்பான்மக்கும் மேலாக பெண் தோழர்களே வந்தது குறிப்பிடத்தக்கது.

காலை 10 மணக்கு கூட்டம் ஆரம்பிக்கப்படும் என்று நாங்கள் அறிவித்து இருந்தோம்.அதனால் இராமநாதபுரம்,சிவகங்கை,தேனி,திண்டுக்கல், நாகர்கோவில்,திருநெல்வேலி,தூத்துக்குடி,திருச்செந்தூர் என பல்வேறு தொலைதூரப் பகுதிகளிலிருந்து கிளம்பியவர்கள் நேரமாகிவிடுமோ என தங்களது காலை உணவைக் கூட துறந்து விட்டு வந்திருந்தனர்.

சில இளம் பெண் தோழர்கள் தங்களது தாய்,தந்தை,கணவன்,சகோதிரன் என அழைத்து வந்திருந்தனர்.இதில் கணவனால் கைவிடப்பட்டோர்,மாற்றுத்திறனுடையோர் என சமூகத்தாலும்,இயற்கையாலும் வஞ்சிக்கப்பட்டோர் இங்காவது தங்களுக்கான உரிமைகள் நிலை நாட்டப்படாதா? என அவர்களின் கண்களில் ஏக்கத்தோடு எங்களை பார்த்துக்கொண்டிருந்தனர்.

வெவ்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் வரவேண்டி இருந்ததால் கூட்டம் ஒருமணி நேரம் தாமதமாகவே துவங்கியது.அந்த இடைப்பட்ட நேரத்தில் வந்திருந்த தோழர்கள் கிளைகளில் தங்களது பணிச் சூழலைப் பற்றியும் தாங்கள் எதிர் கொள்ளும் அன்றாட சிரமங்கள் குறித்தும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.அதாவது அவர்களின் எல்லா துயர்களையும் எங்களால் துடைக்க முடியும் என்ற அவர்களது நம்பிக்கையே அதில் மேலோங்கி இருந்தது.

நிகழ்ச்சி துவங்கியது.தலைமை தாங்கிய தோழர்களான (மாதவராஜ்,சோலைமாணிக்கம்,சங்கர்,செல்வகுமார் திலகராஜ்,பிச்சைமுத்து)ஆகியோரின் சிறப்புரைகளுக்கு பின் அந்த தோழர்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கை எழுச்சி அவர்களுக்குள் எழுந்ததை காண முடிந்தது.அந்த இளம் தோழர்களின் நம்பிக்கையும் எழுச்சியும் எங்கள் தொழிற்சங்கத்திற்கான கடமையையும்,எதிர்காலப் பயணத்தையும் உணர்த்துவதாக அமைந்தது.

எங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக வருகிற 20ஆம் தேதி ஒருநாள் உண்ணாவிரதம் அவர்களூக்காக இருக்க எங்களது ஊழியர் சங்கமும்,அலுவலர் சங்கமும் முடிவு செய்துள்ளது.

நண்பர்களே!

இது ஏதோ எங்கள் வங்கியில் உள்ள பிரச்சனை மட்டும் அல்ல.இது இந்த தேசத்தின் பிரச்சனை.ஆம்! BSNL,NLC,TNEB,போன்றவற்றில் ஏற்கனவே இது போன்ற தற்காலிக ஊழியர்களூக்கான நிரந்தரமாக்கும் போராட்டங்கள் ஆரம்பமாகிவிட்டது(சமீபத்தில் மின்சார வாரியத்தில் இரண்டாம் கட்டமாக ஜுன் 3ஆம் தேதி ஆறாயிரம் ஊழியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்கியது தமிழக அரசு).

வங்கித்துறையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.அதேபோல் மாநில மற்றும் மத்திய அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களிலும்,அரசு அலுவலகங்களிலும் கூட பல ஆயிரம் காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன அவை இன்று தற்காலிக ஊழியர்களின் உதவியாலே இயங்குகிறது.

ஏன்?ஏன்?ஏன்?ஏன் இந்த நிலை.....?

ஒரு பக்கம் வேலவாய்ப்பு திண்டாட்டம்.வறுமை.என மத்தியில் மாநிலத்தில் ஆளும் அத்துனை கட்சிகளும் எந்தவித கட்சிப் பாகுபாடும் இல்லாமல் கூச்சலிட்டுக் கொண்டே.....அந்நிய முதலீடுகளுக்கு ஒரு பக்கம் கதவுகளை திறந்து விட்டுக்கொண்டே...காசுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள்.

மறுபக்கம் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகளை இந்தியஅரசு வெகு வேகமாக பார்த்து வருகிறது.ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டு பெரும் முதலாளிகளூக்கும் அந்நிய முதலீட்டாளர்களூக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அரை சதவிகித வட்டிக்கும்,ஒரு சதவிகத வட்டிக்கும் (பொது மக்களின் பணமான)அரசு வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன் வழங்குகிறது.அப்படி கடனாக வாங்கும் பணத்தையும் அந்த ”பணக்கார தொழில் முனைவோர்” திரும்ப செலுத்த மாட்டார்கள்.அதை ஒவ்வொரு நிதியாண்டிலும் ‘மாண்புமிகு’ நிதியமைச்சர் அவர்கள் மக்கள் வரிப்பணத்தை கொண்டு தள்ளுபடி செய்து அந்த ’பணக்கார’ கடன்காரர்களை காப்பாற்றி விடுவார்.(இதில் தொழிற்சாலைகள் அமைக்க,தொழிற்பூங்காக்கள் தொடங்க என விவசாயிகளின் விளைநிலங்களை வேறு கையகப்படுத்தி தனியாருக்கு தாரை வார்ப்பார்கள்.)

ஆனால் விவசாயிகளுக்கு 7சதவிகித வட்டியில் கடன் கொடுப்பதற்கோ ஆயிரத்தி எட்டு நொள்ளை நொட்டை பார்பார்கள்.சிறு தொழில் முனைவோருக்கு கடன்கள் 12%ற்கு வழங்குவதற்கு கூட இந்த பொதுத்துறை வங்கிகள் தயாரில்லை.ஆனால் சுயதொழில் சுயதொழில் என கூப்பாடு மட்டும் போடுவார்கள்.

வேலை வாய்ப்பு திண்டாட்டத்தை ஒழிக்க இங்கு காலியாக கிடக்கும் மத்திய மாநில அரசுகளின் பணியிடங்களில் முறையான ஆள் எடுக்கும் பணி தொடங்க வேண்டும்.அதே நேரத்தில் எந்த வித பணி பாதுகாப்பும் இன்றி இரவுபகல் பாராமல் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி வரும் அத்துனை தற்காலிகப் பணியாளர்களும் அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலை நிரந்திரம் செய்திடல் வேண்டும்.

தொழிற்சங்க அமைப்புகளை பலவீனப்படுத்தவும், போராடிப் பெற்ற எட்டுமணி நேர வேலை உரிமை போன்ற தொழிலாளர் நலச் சட்டங்களை நிர்மூலமாக்க துடிக்கும் தனியார் ’கைகூலிகளின்’ தந்திரங்களை முறியடிக்கவும் அத்துனை வெகுஜன அமைப்புகளூம் போராட துவங்கவேண்டும். நாம் அனுபவிக்கும் அதே சலுகைகளை அடுத்த நம் தலைமுறையினருக்கும் கிடைத்திட வழி செய்திட வேண்டியது நமது கடமை.

நாங்கள் இந்த நவீன கொத்தடிமைகள் முறைக்கு எதிராக வீதியில் இறங்கி போராட துவங்கிவிட்டோம்.வாருங்கள் எங்கள் கரங்களை பலப்படுத்த நீங்களும்.......

திங்கள், 1 ஜூன், 2009

ஒரு பொய்யும்..சில உண்மைகளும்..


"To say what is that it is not;or what is not that it is ;is false,while to say what is that it is and what is not that it is not,is true."-ARISTOTLE.


”இருப்பதை இல்லை என்பதும்,இல்லாததை இருப்பதாக சொல்வதும் பொய்,அதே வேளையில் இருப்பதை இருப்பதாகவும்,இல்லாததை இல்லையென்றும் சொல்வது தான் உண்மை” என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.

என்னை மிகவும் பாதித்த வாழ்க்கை வரலாறு ரூபாய் நோட்டுகளில் பொக்கை வாய் மலர புன்னகைத்துக்கொண்டே இருக்கும் காந்தியுடைய ”சத்தியசோதனை”- சுயசரிதை.
எனக்கும் காந்திக்கும் இடையே உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்னவென்றால், காந்தியை போலவே எனக்கும் ஹரிச்சந்தரா நாடகம்தான் வாழ்வில் மிக முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுத்தது.

என்ன ஒரு சிறு வித்தியாசம் அவருக்கு அது சத்தியத்தின் வலிமையை உணர்த்தியதால் வாழ்க்கை முழுவதும் முடிந்த வரை வளைத்து வளைத்து உண்மையை மட்டும் தான் பேச வேண்டும் என அவர் முடிவு செய்தார்.

ஆனால் எனக்கு சத்தியத்தால் ஏற்படும் வலியை அது உணர்த்தியதால் தேவையில்லாமல் சத்தியத்தை சோதனை படுத்துவதில்லை என முடிவெடுத்தேன்(பின்னே!அது எவ்வளவு பெரிய மேட்டரு...அதை நாம ஏன் தேவையில்லாம ரோதனை படுத்தனும்ன்னு அத மன்னிச்சு விட்டுட்டேன்).அதனால் எப்ப எப்ப கேப்புல இடம் கெடச்சாலும் கடா வெட்டிருவேன்!

எல்லாரப் போலவும் எனக்கும் சத்தியம்னாலே சக்கரப் பொங்கல் சாப்பிடுற மாதிரி தான் இருந்தது.

சின்ன வயசுல அம்மா,அப்பா,ஸ்கூல் டீச்சர்கள், நண்பர்கள்,சொந்தக்காரனுங்க,வந்தவன் போனவன்னு வளைச்சு வளைச்சு எந்தப் பாகுபாடும் இல்லாம சிக்குன எல்லார் காதுலயும் பூ சுத்தி என்ன ரொம்ப நல்லவன்னு நம்ப வச்சுருக்கேன்.

சில சமயம் லைட்டா மிஸ்ஸாகி எக்குத்தப்பா மாட்டி எக்கச்சக்கமா வாங்கியும் கெட்டியிருக்கேன்.ஆனால் ஒரு நாளும் மனந்தளர்ந்துப் போய் பொய்யே பேசக் கூடாதுன்னு மட்டும் முடிவெடுத்ததில்லை.என்னுடைய முந்தைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டு மீண்டும் அதே மாதிரி முட்டாள்தனமா மாட்டிக்காம விவரமா எஸ்கேப்பாயிடுவேன்.

என்னதான் இருந்தாலும் யானக்கும் அடி சருக்கும் இல்லையா...?

இப்படித்தான் பாருங்க போன வாரம் எம் பொண்டாட்டி இரண்டு நாள் அவங்க அம்மா வீட்டுக்கு போய் தங்கிட்டு வரட்டுமான்னு கேட்டா.எனக்கு மனசு கேட்கல தான்.... இருந்தாலும் பொண்டாட்டியோட ஆசையை நிறைவேத்தி வைக்கிறது ஒரு நல்ல புருஷனோட கடமைங்கறதால எம்மனசு கஷ்டத்தோட.... சாயிங்காலம் அவள அவங்க அம்மா வீட்டுல கொண்டு போய் விட்டேன்.(என்னடா!பில்டப் கொஞ்சம் ஓவரா இருக்கேன் பாக்குறீங்களா...பாவி மவ வீட்டுக்கு வந்த உடனயே எம் பளாக்கைத்தான் படிப்பா.அவ படிக்கலனாலும்........(விடுறா,விடுறா மீசை முறுக்கேரிப்போய் தான் இன்னும் இருக்கு) )

அவங்க அம்மாவீடும் எங்கவீடும் ஒரு கிலோ மீட்டர் தான் தூரம்னாலும் அந்த ஒரு கிலோ மீட்டர் பிரிவை கூட எங்களால தாங்க முடியாததால.....அவ கூட உக்காந்து அவள சமாதானப் படுத்திட்டு...வீட்டுக்கு போன உடனே போன் பண்றேன்னு.... நாளைக்கு காலையில வர்றேன்...சத்தியம் செய்துட்டு வெளியே கிளம்பினா....மனசு ரொம்ப பாரம்மா இருந்துச்சு.

என்னடா செய்யன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்பதான் என் தம்பி பாருக்கு போய் ரம் அடிச்சா பாரம் போயிடும்ன்னு விவேக் மாதிரி அட்வைஸ் பண்ணினான்.தம்பி சொல் மிக்க மந்திரம் இல்லைன்னு
[ஓ!அது தந்தை சொல்லா...பாருக்குள்ளே(உலகம்) வேணும்னா தம்பி தந்தைனு பாகு பாடு இருக்கும்..ஆனா பாருக்குள்ளே (BAR) எல்லாரும் சமம் தானே.(ஆ!கவித..கவித..)]

நானும் அவன் கூட நம்பி போனேன்.இரண்டு லார்ஜ் ஓ.சி.ஆர் ஆர்டர் பண்ணிக்கிட்டு இருக்கும் போது கரெக்டா என் செல்போன் என் மனைவி பெயரை சொல்லி சினுங்கியது.....

(கழுகுக்கு மூக்குல வேர்த்தது போல்ன்னு..... ஒரு பழமொழி உண்டு..... நிச்சயமா அந்த பழமொழியை முதலில் சொன்னது ஒரு ஆம்பிள்ளையாத்தான் இருப்பான் அதுவும் அவன் பொண்டாட்டியை மனசுல வச்சுதான் சொல்லி இருப்பான்.இதுக்காக மகளிர் அமைப்பை சார்ந்தவங்க எனக்கு கெட்ட வார்த்தையில பின்னூட்டம் போட்டா கூட பரவாயில்லை.அவனவன் வலி அவனவனுக்கு....(விடுறா!..விடுறா!..))

நைஸா...பாருக்கு வெளியே போய் அவகிட்ட பேசிட்டு உள்ளே வந்து பாதியில் விட்ட ஆர்டரை தொடர்ந்தேன்.....”பாஸு...சில்லுன்னு ஒரு கோக்..ஒரு லிட்டர் தண்னி நல்லா கூலா...அப்புறம் கொஞ்சம் ஐஸ் கியூப்ஸ்...கிரீன் சாலட் ஒரு பிளேட்...சீக்கிரம் பாஸ்..”

ஒரு இரண்டு நிமிடம் போயிருக்கும்...மீண்டும் என்னவளிடமிருந்து கால் வந்தது...என் தம்பி வினோதமாய் என்னை பார்த்தான்,”இருடா!கல்யாணம் ஆயிட்டாலே இப்படித்தான்...”என்று வெளியில் வந்து காலை(call) அட்டண்ட் செய்து,” சொல்லு.... என்னமா!..”என்றேன்.

”இப்ப,எங்க இருக்கீங்க...?”என்று அதிர்ந்தாள்.”வீட்ல தான்...ஏன் திடீர்ன்னு இப்படி கேக்குற..?” இவ்வளவு தான் பேசினேன்.

“ நான் ஒரு மடச்சின்னு நினச்சுட்டீங்களா..ஏன் இப்படி வரவர ரொம்ப பொய் பேசுறீங்க...என்ன ஏன் இப்படி நம்ப வச்சு ஏமாத்திறீங்க...இப்ப நீங்க தண்ணி அடிச்சுகிட்டு தான இருக்கீங்க...”ஆகா! வசமா சிக்கிட்டோம் டா என்று தெரிந்தாலும்.
சமாளித்தவாறே,”இன்னைக்கு தண்ணி முறையில்லையே...!”ஜோக்குன்னு நினைத்து நான் ஏதோ உளரி கொட்ட...இடி இடித்து மழை பெய்து ஒரு வழியாய் ஓய்ந்தது.

சரி நமக்கு எதிராய் யார் இந்த சதியை செய்திருப்பார்..என்று என் தம்பியிடம் புலம்பியவாறே இரண்டு லார்ஜையும் உள்ளே விட்டோம்...விடையை எளிதில் கண்டு பிடிக்க முடியாததால் கொஞ்சம் தெளிவடைய மேலும் இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தோம்.
இப்போது போட்டுக் கொடுத்தவனை கண்டு பிடித்தால் என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்வதற்காக மேலும் இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தோம்.என்ன ஆச்சர்யம்!பழி வாங்கும் எண்ணம் இப்போது என்னிடம் மறைந்து விட்டது.ஆனால் அந்த கோபம் இப்போது என் மனைவி மேல் திரும்பி இருந்தது, “எவனாவது எதாவது சொன்னால் இவள் எப்படி நம்பலாம்...”,”என்ன தான் உண்மையா இருந்தாலும் ஒரு மூணாவது மனுஷன் பேச்சை கேட்டு இப்படி என்ன ச்ந்தேகப்படலாமா...?”என்று கவலையில் மேலும் இரண்டு லார்ஜ் வாங்கினோம்.


“சரி!விடு காலையில பார்த்துக்கலாம்...”என்று என் தம்பி ஏதோ குளரினான்...
“அத அப்படியெல்லாம் விட முடியாது என...” என் மனைவிக்கு கால் செய்தால் அவள் கட் பண்ணி விட்டுவிட்டு சுட்ச் ஆப் செய்துவிட்டிருந்தாள்.

கடும் கோபமும்,எரிச்சலுமாக வீட்டுக்கு போய் கட்டிலில் விழுந்தால்....பூமி சுற்றுவதை முழுவதுமாக என்னால் உணர முடிந்தது...ஏதோ பூகம்பம் தான் வந்துவிட்டது என நினைத்தாவாறே வீட்டுக்கு வெளியில் வந்தால்... என் தம்பியும் பூமி சுற்றுவதை உணர்ந்தானாம்.வாயில் விரலை விட்டு ஓ.சி.ஆரை(வாந்தின்னு எப்படி மரியாதையில்லாம சொல்ல முடியும்?) வெளியே எடுத்துவிட்டால் பூமி சுற்றுவதும் நின்று விடும்! என்ற உலகமறிந்த கண்டுபிடிப்பையும் எனக்கு நினைவூட்டினான்......வாயில் விரல் வைக்க வேண்டிய அவசியமே இல்லாமல் வாந்தி வந்தது...(அட!வெளியே வந்ததுக்கு அப்புறம் அந்த கருமத்திற்க்கு என்ன மரியாதை வேண்டி கிடக்குது) உலகம் சுற்றுவதும் நின்றது....

எப்போது தூங்கினேன் எப்படி விழிந்தேன் என்று தெரியவில்லை...ஆனால் விடிந்து விட்டிருந்தது. நேற்றைய நிகழ்வுகள் மெல்ல நினைவுக்கு வந்தது.ஒரு வழியாக கிளம்பி அவள் அம்மா வீட்டுக்கு போனால் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள்...அப்படி இப்படி என்று ஒருவாறு சமாதானப் படுத்திவிட்டு....யார் அந்த கருணா..?என்று மெல்ல கேட்டேன்.

அவள்,” நீங்க தான் அது.என்கிட்ட பேசிட்டு போனை ஒழுங்கா கட் பண்ணாம நீங்க ஆர்டர் கொடுத்தது எனக்கு கேட்டுச்சு...அத வச்சு தான் கண்டி பிடிச்சேன்...”என்று அவள் சொல்லிக்கொண்டே போனாள்..எனக்கு மறுபடியும்...உலகம் சுற்றியது.... இப்போது இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது என்னவென்றால் வெறும் பொய்களால் உண்மைகளை மறைத்து விடமுடியாது.எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும்.....

வாய்மையே வெல்லும்!பொய்மையை கொல்லும்!

வியாழன், 21 மே, 2009

நான் பேசுகிறேன்......


நாம் இப்படித்தான்.........

****இரு சக்கர வாகனங்களில் செல்லும் முன் பின் தெரியாத நபர் வண்டியில் சைடு ஸ்டாண்ட் போடாமல் சென்றால் அலறி அடித்துக்கொண்டு எச்சரிக்கை செய்வோம்.லைட்டு போட்டுக் கொண்டு எவனாவது பகலில் வண்டி ஓட்டினால் கையை மடக்கி விரித்து மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு அவன் தான் காரணம் என்பது போல் பொதுச் சேவை செய்வோம்.ஆனால் அவனே எங்காவது அடிபட்டு விழுந்தாலோ அல்லது உயிருக்கு போராடினாலோ சந்தடியில்லாமல் இடத்தை காலி செய்வோம் நமக்கு ஏன் வீண் வம்பு என்று.

****ஊரல்லாம் லஞ்சம்,ஊழல் என்று புலம்புவோம்.ஆனால் நமக்கு அல்லது நமது பிள்ளைகளுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் எவ்வளவு ஆனலும் சரி காரியம் நடந்தால் போதும் என்று கொடுக்க வேண்டியதை கொடுத்து நடக்க வேண்டியதை நடத்துவோம்.இதுல நாயகன் கமல் ரேஞ்சில் அவங்களை மாறச் சொல்லுங்க நான் மாறுகிறேன் ஞாயப் படுத்தவேற செய்வோம்.(எழுதுற நானும் இதில் விதிவிலக்கல்ல!)

****வாய் கிழிய மனித நேயம் பேசுவோம்.நம்மை தவிர நாட்டில் உள்ள அனைவருமே ஈவு இரக்கம் எதுவும் இல்லாதவர்கள் என்றும் நாம் தான் இந்த சுயநல நாட்டில் பிழைக்க தெரியாதவர்கள் என்றும் நம்மை நாமே இகழ்புகழ்ச்சி செய்து கொள்வோம்.ஆனால் பேருந்தில் இடம் போடுவதற்காக கை குட்டையிலிருந்து கோமனம் வரைக்கும் தூக்கி போட்டு இடம் பிடிப்போம்.(அரசியல்வாதிகளெல்லாம் நம்மிடம் தோற்றுப்போகும் அளவிற்க்கு).
அதே போல் நம் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்யும் பயணி அசதியில் நம்மீது தூங்கி விழுந்தால் அவ்வளவு தான் மனித நேயம் பொங்கப் பொங்க அவன் மயிரை ஆய்ந்து அவனை துன்புறுத்துவோம் தவறு துகில் களைப்போம்.(இதில் கை முட்டை கொண்டு இடிப்பது, நாக்கை பிடிங்கிக் கொண்டு சாவது போல் அவனை வார்த்தைகளாலே வறுத்தெடுப்பது என பல விதங்கள் உண்டு)

****அரசியல்வாதிகளைப் பற்றியும்,அரசு இயந்திரங்களைப் பற்றியும் ஆயிரம் குறைகள் சொல்வோம்.ஆனால் நாம் பொது இடத்தில்தான் மூத்திரம் போவோம். நடு ரோட்டில் தான் எச்சில் துப்புவோம்.கோபம் வந்தால் அரசாங்கப் பொருட்களை தான் சேதப்படுத்துவோம்.தண்ணி அடித்துவிட்டுத்தான் வண்டி ஓட்டுவோம்.

****தனி மனித உரிமை பேசுவோம்.ஆனால் நமது கவலைகளும்,கோபங்களும் எப்போதும் நமது ஆசைகளையும் ,சுயதேவைகளையும் பொறுத்தே எழும்.தனி மனித ஒழுக்கம் கெட்டுப் போய்விட்டதாக புலம்புவோம்.உலகம் நிறைய மாற வேண்டி உள்ளது என கருத்துரைப்போம் ஏன் கவலை கூட கொள்வோம்.ஆனால் எந்த ஒரு சிறு மாற்றத்திற்க்கும் நாம் நம்மை உட்படுத்த மாட்டோம்.

****அடுத்த வீட்டில் எழவு விழுந்தால் அது செய்தி ஆனால் அதுவே நம் வீட்டில் என்றால் அது மீளாத் துயர்,துக்கம்.
அப்படித்தான் நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம்.

****நாம் நிழலை நிஜமாய் கொள்வோம். நிஜங்களை மௌனத்தால் கொல்வோம்.ஆனால் என்றாவது ஒரு நாள் யாராவது ஒருவன் வருவான் நம் நாட்டில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருவான் என தீர்க்கமாய் நம்புவோம்.கண்களை இறுக மூடிக்கொண்டு விடியல் காண துடிக்கும் குடிகாரன் போல்.

தனி மனித மாற்றங்களால் இந்த சமூகம் மாறுமா?

புள்ளிகள் சேர்ந்து கோடாவது போல் தனி மனிதர்கள் சேர்ந்தே சமூகம் உருவானது.அதனால் தனி மனித மாற்றங்களால் சமூக மாற்றம் ஏற்படுத்த முடியும்.
மாற்றங்கள் வேண்டி தலைவர்கள் தேடி காத்திருப்போரே!வாருங்கள் எந்த மாற்றமும் தானாய் வருவதில்லை நாமாய் ஏற்படுத்தும் வரை.

சுட்டால்தான் நெருப்பு!
சுற்றினால்தான் பூமி!
போராடினால்தான் மனிதன்!-ஆம் மாற்றங்கள் வேண்டி போராடுவோம்.

வியாழன், 14 மே, 2009

நாங்க ஸ்கூலுக்கு போறோம்.....!



ஜனநாயகம்!

மக்களால் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் நன்நாள் தேர்தல் நாள்!....

அப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் மக்களுக்காக தொண்டு செய்வதே! அரசியலாகும்!......

அரசியல் செய்வோருக்கு அரம் தவறு அறம் கூற்றாகும்!.....

மக்களுக்காக தொண்டு செய்வதற்காகவே அரசியல் செய்பவர்கள் தான் நமது அரசியல்தலைவர்கள்!...

தனது நலத்தைவிட பொது நலமே தனக்கு முக்கியம் என்று செயல்படுபவர்கள் தான் நமது அரசியல் தலைவர்கள்!..........

இப்படிப்பட்ட அற்புதமான ஒரு அமைப்பையும் நல்ல வழிகாட்டிகளையும் நமக்கு கிடைப்பதற்காக நமது முன்னோர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தார்கள்!.........

வாழ்க ஜனநாயகம்! வளர்க நம் நாடு!

(குறிப்பு: .மேலே நீங்கள் படித்தது, எங்க கிளாஸ் சாரு! நாளைக்கு கேள்வி கேட்பதாக சொன்ன வீட்டுப்பாடத்தை உங்களிடம் ஒப்பிச்சேன் அவ்வளவுதான்.... என்னடா.. இது என்று யாரும் குழப்பம் அடைய வேண்டாம்....உங்களுக்கு மட்டும் ஒரு உண்மையை சொல்கிறேன்! நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக நான்,எங்க அப்பா ,எங்க தாத்தா,பாட்டி எல்லாரும் போயிருந்தோம் .அங்க எங்களுக்கு 18வயது இன்னும் பூர்த்தியாகவில்லை என்றும் அதனால் நாங்கள் வாக்களிக்க முடியாது எனவும் தேர்தல் அதிகாரி சொல்லிவிட்டார்.
அதனால் மற்றற்ற மகிழ்ச்சிக்கு ஆழான நாங்கள் மீண்டும் பள்ளிக்கு படிக்க சென்றுவிட்டோம்!
படிக்கற வயசுல படிக்காம வோட்டுப் போடப்போனது தப்புதானே.....? என்ன சொல்றீங்க.....?)

சனி, 2 மே, 2009

வாழ்வை காதல் செய்வோம்!!!


எங்கள் வீட்டை கவனித்து வரும் அக்கா நேற்று காலையில் நான் வேலைக்கு செல்லும் நேரத்தில், செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவள் தீடீரென்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். நான் பதறியபடி என்னவென்று விசாரித்தேன்.அவள் அழுதுகொண்டே தனது மகள் முந்தைய நாள் இரவே பாட்டி வீட்டிற்கு செல்வதாக பொய் சொல்லி வேறு ஜாதி பையனோடு ஓடிப் போய்விட்டதாக கூறி அழுகையை தொடர்ந்தாள். நான் சமாதானம் என்ற பெயரில் ஏதேதோ சொல்லிவிட்டு பஸ்ஸை பிடிக்க ஓடிவிட்டேன்.அலுவலகம் முடிந்து வீடு திரும்பினேன்.இப்போது அந்த அக்காவின் முகத்தில் கொஞ்சம் தெளிவு தெரிந்தது.ஆனாலும் சோகம் குறையவில்லை(பிறகு மகள் ஓடிப்போனாள் குதுகலமா கொப்பளிக்கும்?).
நானும் என் முகத்தில் கொஞ்சம் வாட்டத்தை வீம்பாக வரவழைத்துக் கொண்டு ,”என்னக்கா ஏதும் தகவல் தெரிஞ்சதா?”என்று வினவினேன்.
ஏற்கனவே இந்தக் கேள்வியை அதிகம் முறை எதிர்கொண்டிருந்தாள் போலும்.அதனால் எந்த தடுமாற்றமும் இல்லாமல் மிக சரளமாக வார்த்தைகள் வந்து விழுந்தன,”அந்தக் கழுத! திருப்பூரில் இதுக்கு முன்னாடி அவ வேலை பார்த்த போது தங்கியிருந்த ரூமுக்கு போய் இருந்திருக்கா....ஒருவழியா அவ இருந்த இடத்தை கண்டுபிடிச்சு அவளை கூட்டியார ஆள் போயிருக்கு..” என்றபடி அவள் பிள்ளைகள் வளர்க்க பட்ட கஷ்டத்தையும், அவள் குடும்ப சூழலை உணராத குழந்தைகளை பற்றிய கவலைகளாகவும் அவளது குமுறல்கள் தொடர்ந்தன... ஒருவாறு அவளை ஆறுதல் படுத்தி அனுப்பிவைத்தோம்.(அவளது மகள் இருந்த இடத்தை கண்டுபிடிச்ச விதம்.அவர்கள் போலீஸுக்கு போனார்களா? இல்லையா?,அந்த பையன் வீட்டாருடன் என்ன பேசிக்கொண்டார்கள்? போன்ற தகவல்கள் இந்த பதிவிற்கு அவசியமாக எனக்கு படாததால் அதை எழுதவில்லை).

இரண்டு நாட்களாக அந்த அக்கா வீட்டு வேலைக்கு வராததால் என்னவென்று பார்க்க சென்றபோது தான் தெரிந்தது அந்த அக்காவின் மகள் விஷம் அருந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள் என்று.

அந்த பிள்ளை பிழைத்துக்கொண்டாளா? அவள் காதல் கைகூடியதா?இல்லையா?என்பதை பகிர்ந்து கொள்வதல்ல என் பதிவின் நோக்கம்.
மேற் சொன்ன சம்பவத்தை உங்களுடன் ஏன் பகிர்ந்து கொண்டேன் என்றால்.....

ஒரு பெண் அதுவும் சமூகத்தின் கடை நிலை பொருளாதார சூழலில் வளர்கப்பட்டவள்.கல்வியின் நிழலை மிகக் கடுமையான குடும்பச் சிக்கல்களுக்கு இடையே காண கிடைத்தவள்.வறுமைக்கும்,தேவைக்கும் இடையே தன் தாய் எந்த வித சமூக பாதுகாப்புமின்றி தனியொரு மனுஷியாக நின்று போராடிக்கொண்டிருப்பதை பார்த்து வளர்ந்தவள்.இவை எதைப் பற்றியும் கவலைபடாமல் தன் காதல்ஆசை ஒன்றே பிரதானம் எனக் கொண்டு வாழ்வை முடித்துக்கொள்ள முடிவு செய்தது என்னை இந்த என் தலைமுறையினரைப் பற்றி மிக கவலை கொள்ள செய்தது.

ஏனென்றால் இது நம் சமூகத்தின் ஏதோ ஒரு இடத்தில் ஒரு பெண்ணுக்கோ அல்ல ஆணுக்கோ நடக்கும் விஷயமல்ல.இந்த பதிவை எழுதும் நானும் அதை படிக்கும் நிங்களும் கடந்து வந்த (வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒருமுறை கடக்கப் போகும்) ஒரு பகுதி தான் இது.

காதல் ஒரு அற்புதமான உணர்வு.ஜாதி,மதம்,இனம்,மொழி,என உலகில் உள்ள அத்தனை பேதங்களையும் களைந்து எறியும் வல்லமை கொண்டது காதல்.இதனால் தான் பாரதி போன்றோர் மானிடத்தை காதல் செய்யச் சொன்னார்கள்.எனக்கும் இதில் மாற்றுக்கருத்து கிடையாது.தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லைதான்.ஆனால் தீதையும் நன்றையும் நம்மை புரிய வைப்பதில் நமது புறச்சூழல் பெரிதும் காரணமாகிறது.

காதல் தவறில்லை தான்.ஆனால் காதல் என்றால் என்ன?காதலின் வெற்றி கல்யாணமா?என்பதில் நமக்கு தெளிவு வேண்டும்.

***முதலில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே நேசிக்கவேண்டும்.நாம் நம்மிலிருந்தே நமது காதலை தொடங்கினால்தான் நாம் காணும் விஷயங்கள்,பழகும் மனிதர்கள்,செல்லும் இடங்கள்,பார்க்கும் வேலைகள் என நமது காதல் விரிவடையும்.

***காதலின் வெற்றி கல்யாணம் என்பது மிகவும் அபத்தமானது.உணர்வுகள் வெற்றி தோல்விகளை சந்திப்பதில்லை. நாம் நேசித்த நபரை நிர்பந்தத்தால் பிரிய நேர்ந்தால் நமது காதல் இல்லை என்று ஆகிவிடுமா?இரண்டு நபர்கள் பிரிய நேருமாயின் அப்பிரிவால் ஒருவரையொருவர் வெறுக்க முடிந்தால் அவர்களுக்கு இடையே இருந்தது ஏதோ ஒரு எதிர்பார்ப்பேயன்று காதல் இல்லை.

***கல்யாணம் செய்வதாக உறுதி செய்த இருவரில் ஒருவர் வார்த்தை தவறினால் அதிக இழப்பு யாருக்கு?ஏமாற்றியவருக்கா?ஏமாற்றப்பட்டவருக்கா?
நிச்சயமாக ஏமாற்றியதாக நினைப்பவருக்கே.ஏனென்றால் நிஜமான காதலை இழந்தவர் அவரே.மாறாக ஏமாற்றப்பட்டதாக சொல்லப்படுபவரோ தவறான நபரிடமிருந்து தப்பிப்பிழைத்த அதிஷ்டசாலியே.

***செய்தி ஊடகங்களும், திரைப்படங்களும் காதலை வியாபார சரக்காக மட்டுமே பார்கின்றது.இங்கு நூற்றிற்கு தொன்னூற்றி ஒன்பது திரைப்படங்கள் காதலை மையமாக வைத்தே எடுக்கப்படுகிறது.அவைகள் சொல்லி கொடுப்பது எல்லாம் பெண்ணை எப்படி வசியம் செய்வது என்றே.அவர்களை பொறுத்தவரையில் பெண்ணும் ஒரு பொருளே.அவளை அடைய வேண்டியது ஒரு ஆணின் கடமை அவ்வளவுதான்.காதலர்கள் ஒன்று கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது காதலித்த பாவத்திற்காக இறந்து விட வேண்டும்.காதலுக்காக எதுவும் செய்யலாம் யாரை வேண்டுமானலும் கொலையும் செய்யலாம்.இதை தான் இன்றைய திரைபடங்கள் போதிக்கின்றன.
இந்த உலகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது.அதை பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை.வாழ்க்கை பயணத்தில் காதல் ஒரு சம்பவம் என்று இல்லாமல் காதல் தான் வாழ்க்கை என்று போதனை செய்து எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கையையும் இந்த சமூகத்தின் எதிர் காலத்தையும் பின்னடைய செய்த பெருமை இந்த திரைப்படத்துறைக்கு உள்ளது.

***ஏ உலக காதலர்களே! தாஜ்மகாலை உலக அதிசயமாகவும் காதலின் ஒப்பற்ற சின்னமாகவும் போற்றுபவர்களே...உங்களுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க காதல் கதையை சொல்கிறேன் கேளுங்கள்.......

குராம் என்றொரு அரச குமாரன் இருந்தான்.அவன் மிக எளிதில் எந்த ஒரு கட்டழகியும் கண்டு மயங்கும் பேரழகை கொண்டிருந்தான்.ஒரு நாள் அவன் கடைத்தெருவிற்கு சென்றிருந்த போது ஒரு கண்ணாடிக் கடையில் ஒரு பெண் துருதுருவென்று வேலை செய்து கொண்டிருந்தாள்.அவள் எப்பட்ப் பட்ட அழகி என்றால்......அவளை கண்ட பின்பு ஒருவன் செயலற்றுப் போனால் தான் அவன் ஆரோக்கியமான ஆண்மகன். மாறாக அவளை வர்ணிக்க வார்த்தைகள் தேடினால் அவனுக்குள் ஆண்மை சுரப்பிகள் வேலை செய்யவில்லை என்றே பொருள்.அந்தப் பேரழகி! அர்ஜுமண்ட் பானு பேகம்.(வசதிக்காக பேகம் என்று கொள்வோம்).இப்படிப் பட்ட இருவர் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டபிறகு என்ன பிறக்கும்? கழுதையும் ,குதிரையுமா பிறக்கும்?.....ஆம்!....அதேதான்....
காதல் பிறந்தது.அவளும் பார்சீய ராஜ வம்சத்தை சேர்ந்தவள்.அதனால் எந்த குத்தும் வெட்டும் இல்லாமல் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்பட்டது.அரச சோதிடர்கள் அவர்களது திருமணத்தை ஐந்து ஆண்டுகள் கழித்து முடிவு செய்தார்கள்.இதற்கு இடையில் குராம் அவளை உளமாற காதலித்துக் கொண்டே இரண்டே இரண்டு திரும்ணங்கள் மட்டும் செய்து கொண்டான்.ஒரு வழியாக பேகத்தை ஐந்து ஆண்டுகள் கழித்து மூன்றாவதாக மணம் முடித்துக் கொண்டான்.அவளை மணம் முடித்த பிறகும் அவன் ஏராளமான பெண்களை தவிற்க முடியாத காரணங்களால் மணந்து கொண்டாலும்.பேகத்தை மற்றவரை காட்டிலும் அதிகம் நேசித்தான்.அதற்கு சாட்சியாக அவர்களுக்கு பதினான்கு குழந்தைகள் பிறந்தன.பதினான்காவது பிரசவத்தின் போது பேகம் இறந்து விட்டபடியால் அவளால் மேலும் குழந்தைகள் பெற முடியவில்லை!!!!.காதல் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் குராமும் வளைத்து வளைத்து கல்யாணம் கட்டி பார்த்தார் துக்கம் அடங்கவில்லை.கடைசியாக மனைவியின் ஆசைப்படி யமுனை ஆற்றங்கரையில் பளிங்கு கல்லறை ஒன்றே பேகத்தை புதைத்த இடத்தில் கட்டினார்.....ஆம்!!!அது தான் தாஜ்மகால்.குராமின் பட்டப் பெயர் தான்(பட்டம் சூட்டப்பட்ட போது தான்) ஷாஜஹான்.அவரை மணந்து கொண்டதால் அர்ஜுமண்ட் பானு பேகம்..மும்தாஜ் மகால் ஆனார். இது தான் உலக காதல் சின்னத்தின் வரலாறு!!!

ஆகவே! காதல் காதல் காதல் காதல் போயின்.........................சாதலா?மற்றொரு காதலா.....?
எப்போதோ படித்த ஒரு கவிதை ஞாபகம் வருகிறது.
உலக அதிசயமாய்.....காதல் சின்னமாய்.....
நம்மிடம் மிஞ்சியது ....
ஒரே ஒரு கல்லறைதான்.

ஆகவே!நம்மை கொன்று நம் காதலை வளர்க்கவோ வாழவைக்கவோ முடியாது.காதல் வாழ வாழ்வை காதலிப்போம்.