சனி, 9 ஜூலை, 2011

இருக்கிறதா சமூகம் இன்னும்?


புத்தகப் பையைக் களவாடிக் கொண்டு
யார் எடுத்துச் சுமத்தியது
உன் தோள்களில் அந்த மண்வெட்டியை ?
கழுத்து சுற்றிப் புரளும் அந்தக் கைத்துண்டு
வேலையிடத்தின் ஐ டி அட்டையா?

காய்ப்பேறத் தயாராகும்
அந்தப் பிஞ்சுக் கரங்களில்
சேகரிக்கப் போவது
அடுத்த தலைமுறைக்கான வறுமையையா...

ஆர்வமோ, அச்சமோ, ஏக்கமோ
இன்னதென்று அறியமாட்டாதபடி
அப்பாவியாகவே உற்றுப் பார்க்கும்
அந்த ஒரு ஜோடி கண்கள்
இன்னும் கொல்லவில்லையா இந்த சமூகத்தை?


- எஸ் வி வேணுகோபாலன்

3 கருத்துகள்:

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோதரா, உங்கள் ப்ளாக்கைப் பின் தொடர ஆவலுடன் வந்தேன், ஆனால் பாலோயர லிஸ்ட்டினைக் காணவில்லை. பாலோயர் லிஸ்ட்டினை உங்கள் வலையில் இணைக்க முடியுமா?

நிரூபன் சொன்னது…

சமூகத்திலுள்ளோரின் பாராமுகத்தால், உருவாகும் குழந்தைத் தொழிலாளர்களின் ஏக்கம் நிறைந்த எதிர்காலம் பற்றி ஐயங்களை நீங்கள் பகிர்ந்துள்ள இக் கவிதை உரைத்து நிற்கிறது.

Unknown சொன்னது…

நன்றி நிரூபன்....உங்கள் வருகைக்கும்,பகிர்வுக்கும்!!!! (follower list தானாய் காணாமல் போய் அதுவாய் மீண்டும் வந்துவிட்டது. எல்லாம் கூகுள் மயம்!!!!)