திங்கள், 1 ஜூன், 2009

ஒரு பொய்யும்..சில உண்மைகளும்..


"To say what is that it is not;or what is not that it is ;is false,while to say what is that it is and what is not that it is not,is true."-ARISTOTLE.


”இருப்பதை இல்லை என்பதும்,இல்லாததை இருப்பதாக சொல்வதும் பொய்,அதே வேளையில் இருப்பதை இருப்பதாகவும்,இல்லாததை இல்லையென்றும் சொல்வது தான் உண்மை” என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.

என்னை மிகவும் பாதித்த வாழ்க்கை வரலாறு ரூபாய் நோட்டுகளில் பொக்கை வாய் மலர புன்னகைத்துக்கொண்டே இருக்கும் காந்தியுடைய ”சத்தியசோதனை”- சுயசரிதை.
எனக்கும் காந்திக்கும் இடையே உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்னவென்றால், காந்தியை போலவே எனக்கும் ஹரிச்சந்தரா நாடகம்தான் வாழ்வில் மிக முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுத்தது.

என்ன ஒரு சிறு வித்தியாசம் அவருக்கு அது சத்தியத்தின் வலிமையை உணர்த்தியதால் வாழ்க்கை முழுவதும் முடிந்த வரை வளைத்து வளைத்து உண்மையை மட்டும் தான் பேச வேண்டும் என அவர் முடிவு செய்தார்.

ஆனால் எனக்கு சத்தியத்தால் ஏற்படும் வலியை அது உணர்த்தியதால் தேவையில்லாமல் சத்தியத்தை சோதனை படுத்துவதில்லை என முடிவெடுத்தேன்(பின்னே!அது எவ்வளவு பெரிய மேட்டரு...அதை நாம ஏன் தேவையில்லாம ரோதனை படுத்தனும்ன்னு அத மன்னிச்சு விட்டுட்டேன்).அதனால் எப்ப எப்ப கேப்புல இடம் கெடச்சாலும் கடா வெட்டிருவேன்!

எல்லாரப் போலவும் எனக்கும் சத்தியம்னாலே சக்கரப் பொங்கல் சாப்பிடுற மாதிரி தான் இருந்தது.

சின்ன வயசுல அம்மா,அப்பா,ஸ்கூல் டீச்சர்கள், நண்பர்கள்,சொந்தக்காரனுங்க,வந்தவன் போனவன்னு வளைச்சு வளைச்சு எந்தப் பாகுபாடும் இல்லாம சிக்குன எல்லார் காதுலயும் பூ சுத்தி என்ன ரொம்ப நல்லவன்னு நம்ப வச்சுருக்கேன்.

சில சமயம் லைட்டா மிஸ்ஸாகி எக்குத்தப்பா மாட்டி எக்கச்சக்கமா வாங்கியும் கெட்டியிருக்கேன்.ஆனால் ஒரு நாளும் மனந்தளர்ந்துப் போய் பொய்யே பேசக் கூடாதுன்னு மட்டும் முடிவெடுத்ததில்லை.என்னுடைய முந்தைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டு மீண்டும் அதே மாதிரி முட்டாள்தனமா மாட்டிக்காம விவரமா எஸ்கேப்பாயிடுவேன்.

என்னதான் இருந்தாலும் யானக்கும் அடி சருக்கும் இல்லையா...?

இப்படித்தான் பாருங்க போன வாரம் எம் பொண்டாட்டி இரண்டு நாள் அவங்க அம்மா வீட்டுக்கு போய் தங்கிட்டு வரட்டுமான்னு கேட்டா.எனக்கு மனசு கேட்கல தான்.... இருந்தாலும் பொண்டாட்டியோட ஆசையை நிறைவேத்தி வைக்கிறது ஒரு நல்ல புருஷனோட கடமைங்கறதால எம்மனசு கஷ்டத்தோட.... சாயிங்காலம் அவள அவங்க அம்மா வீட்டுல கொண்டு போய் விட்டேன்.(என்னடா!பில்டப் கொஞ்சம் ஓவரா இருக்கேன் பாக்குறீங்களா...பாவி மவ வீட்டுக்கு வந்த உடனயே எம் பளாக்கைத்தான் படிப்பா.அவ படிக்கலனாலும்........(விடுறா,விடுறா மீசை முறுக்கேரிப்போய் தான் இன்னும் இருக்கு) )

அவங்க அம்மாவீடும் எங்கவீடும் ஒரு கிலோ மீட்டர் தான் தூரம்னாலும் அந்த ஒரு கிலோ மீட்டர் பிரிவை கூட எங்களால தாங்க முடியாததால.....அவ கூட உக்காந்து அவள சமாதானப் படுத்திட்டு...வீட்டுக்கு போன உடனே போன் பண்றேன்னு.... நாளைக்கு காலையில வர்றேன்...சத்தியம் செய்துட்டு வெளியே கிளம்பினா....மனசு ரொம்ப பாரம்மா இருந்துச்சு.

என்னடா செய்யன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்பதான் என் தம்பி பாருக்கு போய் ரம் அடிச்சா பாரம் போயிடும்ன்னு விவேக் மாதிரி அட்வைஸ் பண்ணினான்.தம்பி சொல் மிக்க மந்திரம் இல்லைன்னு
[ஓ!அது தந்தை சொல்லா...பாருக்குள்ளே(உலகம்) வேணும்னா தம்பி தந்தைனு பாகு பாடு இருக்கும்..ஆனா பாருக்குள்ளே (BAR) எல்லாரும் சமம் தானே.(ஆ!கவித..கவித..)]

நானும் அவன் கூட நம்பி போனேன்.இரண்டு லார்ஜ் ஓ.சி.ஆர் ஆர்டர் பண்ணிக்கிட்டு இருக்கும் போது கரெக்டா என் செல்போன் என் மனைவி பெயரை சொல்லி சினுங்கியது.....

(கழுகுக்கு மூக்குல வேர்த்தது போல்ன்னு..... ஒரு பழமொழி உண்டு..... நிச்சயமா அந்த பழமொழியை முதலில் சொன்னது ஒரு ஆம்பிள்ளையாத்தான் இருப்பான் அதுவும் அவன் பொண்டாட்டியை மனசுல வச்சுதான் சொல்லி இருப்பான்.இதுக்காக மகளிர் அமைப்பை சார்ந்தவங்க எனக்கு கெட்ட வார்த்தையில பின்னூட்டம் போட்டா கூட பரவாயில்லை.அவனவன் வலி அவனவனுக்கு....(விடுறா!..விடுறா!..))

நைஸா...பாருக்கு வெளியே போய் அவகிட்ட பேசிட்டு உள்ளே வந்து பாதியில் விட்ட ஆர்டரை தொடர்ந்தேன்.....”பாஸு...சில்லுன்னு ஒரு கோக்..ஒரு லிட்டர் தண்னி நல்லா கூலா...அப்புறம் கொஞ்சம் ஐஸ் கியூப்ஸ்...கிரீன் சாலட் ஒரு பிளேட்...சீக்கிரம் பாஸ்..”

ஒரு இரண்டு நிமிடம் போயிருக்கும்...மீண்டும் என்னவளிடமிருந்து கால் வந்தது...என் தம்பி வினோதமாய் என்னை பார்த்தான்,”இருடா!கல்யாணம் ஆயிட்டாலே இப்படித்தான்...”என்று வெளியில் வந்து காலை(call) அட்டண்ட் செய்து,” சொல்லு.... என்னமா!..”என்றேன்.

”இப்ப,எங்க இருக்கீங்க...?”என்று அதிர்ந்தாள்.”வீட்ல தான்...ஏன் திடீர்ன்னு இப்படி கேக்குற..?” இவ்வளவு தான் பேசினேன்.

“ நான் ஒரு மடச்சின்னு நினச்சுட்டீங்களா..ஏன் இப்படி வரவர ரொம்ப பொய் பேசுறீங்க...என்ன ஏன் இப்படி நம்ப வச்சு ஏமாத்திறீங்க...இப்ப நீங்க தண்ணி அடிச்சுகிட்டு தான இருக்கீங்க...”ஆகா! வசமா சிக்கிட்டோம் டா என்று தெரிந்தாலும்.
சமாளித்தவாறே,”இன்னைக்கு தண்ணி முறையில்லையே...!”ஜோக்குன்னு நினைத்து நான் ஏதோ உளரி கொட்ட...இடி இடித்து மழை பெய்து ஒரு வழியாய் ஓய்ந்தது.

சரி நமக்கு எதிராய் யார் இந்த சதியை செய்திருப்பார்..என்று என் தம்பியிடம் புலம்பியவாறே இரண்டு லார்ஜையும் உள்ளே விட்டோம்...விடையை எளிதில் கண்டு பிடிக்க முடியாததால் கொஞ்சம் தெளிவடைய மேலும் இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தோம்.
இப்போது போட்டுக் கொடுத்தவனை கண்டு பிடித்தால் என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்வதற்காக மேலும் இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தோம்.என்ன ஆச்சர்யம்!பழி வாங்கும் எண்ணம் இப்போது என்னிடம் மறைந்து விட்டது.ஆனால் அந்த கோபம் இப்போது என் மனைவி மேல் திரும்பி இருந்தது, “எவனாவது எதாவது சொன்னால் இவள் எப்படி நம்பலாம்...”,”என்ன தான் உண்மையா இருந்தாலும் ஒரு மூணாவது மனுஷன் பேச்சை கேட்டு இப்படி என்ன ச்ந்தேகப்படலாமா...?”என்று கவலையில் மேலும் இரண்டு லார்ஜ் வாங்கினோம்.


“சரி!விடு காலையில பார்த்துக்கலாம்...”என்று என் தம்பி ஏதோ குளரினான்...
“அத அப்படியெல்லாம் விட முடியாது என...” என் மனைவிக்கு கால் செய்தால் அவள் கட் பண்ணி விட்டுவிட்டு சுட்ச் ஆப் செய்துவிட்டிருந்தாள்.

கடும் கோபமும்,எரிச்சலுமாக வீட்டுக்கு போய் கட்டிலில் விழுந்தால்....பூமி சுற்றுவதை முழுவதுமாக என்னால் உணர முடிந்தது...ஏதோ பூகம்பம் தான் வந்துவிட்டது என நினைத்தாவாறே வீட்டுக்கு வெளியில் வந்தால்... என் தம்பியும் பூமி சுற்றுவதை உணர்ந்தானாம்.வாயில் விரலை விட்டு ஓ.சி.ஆரை(வாந்தின்னு எப்படி மரியாதையில்லாம சொல்ல முடியும்?) வெளியே எடுத்துவிட்டால் பூமி சுற்றுவதும் நின்று விடும்! என்ற உலகமறிந்த கண்டுபிடிப்பையும் எனக்கு நினைவூட்டினான்......வாயில் விரல் வைக்க வேண்டிய அவசியமே இல்லாமல் வாந்தி வந்தது...(அட!வெளியே வந்ததுக்கு அப்புறம் அந்த கருமத்திற்க்கு என்ன மரியாதை வேண்டி கிடக்குது) உலகம் சுற்றுவதும் நின்றது....

எப்போது தூங்கினேன் எப்படி விழிந்தேன் என்று தெரியவில்லை...ஆனால் விடிந்து விட்டிருந்தது. நேற்றைய நிகழ்வுகள் மெல்ல நினைவுக்கு வந்தது.ஒரு வழியாக கிளம்பி அவள் அம்மா வீட்டுக்கு போனால் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள்...அப்படி இப்படி என்று ஒருவாறு சமாதானப் படுத்திவிட்டு....யார் அந்த கருணா..?என்று மெல்ல கேட்டேன்.

அவள்,” நீங்க தான் அது.என்கிட்ட பேசிட்டு போனை ஒழுங்கா கட் பண்ணாம நீங்க ஆர்டர் கொடுத்தது எனக்கு கேட்டுச்சு...அத வச்சு தான் கண்டி பிடிச்சேன்...”என்று அவள் சொல்லிக்கொண்டே போனாள்..எனக்கு மறுபடியும்...உலகம் சுற்றியது.... இப்போது இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது என்னவென்றால் வெறும் பொய்களால் உண்மைகளை மறைத்து விடமுடியாது.எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும்.....

வாய்மையே வெல்லும்!பொய்மையை கொல்லும்!

8 கருத்துகள்:

Joe சொன்னது…

Take off the word verification please?

Joe சொன்னது…

சரியான நகைச்சுவைப் பதிவு!

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிது.

Unknown சொன்னது…

உங்கள் வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி ஜோ!

மாதவராஜ் சொன்னது…

என்ன் தம்பி!
புது மாப்பிள்ளைக்கு என்று போட்டிருந்த முகமூடியை கழற்றி விட்டாயா? இன்னும் இருக்கும் நிறைய.....

சரி.. ஜோ சொல்லியிருக்கும் word verificationஐ எடுக்க ஒரு போன் போடு எனக்கு.

மாதவராஜ் சொன்னது…

அடடே... புத்திசாலித் தம்பி!
அதுக்குள் நீயே எடுத்துட்டியே...

Unknown சொன்னது…

jo,i have taken-off the word verification

Unknown சொன்னது…

thanx madhu anna.....

Jude Rayar சொன்னது…

maapillai ,

en kudumpatha ippadi e - street ku ilukkalaama ?