புதன், 4 நவம்பர், 2015

நினைவுகள்…



பறவை போல் இருக்கிறாய்
இரவெல்லாம் பறக்கிறாய்
நெருங்கினால் எரிகிறாய்- நீ யாரோ?

மேகக் கூட்டம்
புணரும் வானில் தரிக்கிறாய்
கரையில் மோதும்
கடலின் அலையில் எழுகிறாய்
மலையில் வீசும்
தென்றல் காற்றில் மலர்கிறாய் - நீ யாரோ?

என்னை துரத்தும் பொழுதிலே
உன்னை தொலைத்து விடுகிறாய்
எனக்குள் இருக்கும் உன்னை
வெளியில் தேட சொல்கிறாய்
காற்றின் கரங்கள் பற்றியிழுக்க
மறுந்து மீண்டும் இணைகிறாய்- நீ யாரோ?

மரணம் வீழ்த்தி பிறக்கிறாய்
மீண்டும் மீண்டும் வருகிறாய்
உறங்கும் போதும் வருகிறாய்
உறங்க விடாமல் தடுக்கிறாய்
விழித்துக் கொண்டால் மடிகிறாய்
மடிந்தும் மீண்டும் துளிர்கிறாய்- நீ யாரோ?

கருத்துகள் இல்லை: