
அடுக்களை புகுந்து உணவுகள் செய்தோம்
படுக்கைகள் விரித்து உணவுகள் ஆனோம்
காமம் கழிக்கும் கழிவறை ஆனோம்
கருவறை தாங்கும் கல்லறை ஆனோம்
கண்ணீர் சொறிந்து கண்ணீர் சொறிந்து
உணர்வுகள் மறத்து காலம் கழித்தோம்
கற்பை கொண்டு கண்கள் கட்டபட்டோம்
பெண்மை என்னும் விலங்கால் பூட்டபட்டோம் -அன்று
நாய்கள் குறைத்தா நாட்கள் விடியும்?
மூடர்கள் சதியா பெண்ணை முடக்கும்?
அடுக்களை களைந்தோம் வகுப்பறை புகுந்தோம்
மடமையை கொளுத்தி தடைகளை கடந்தோம்
இடர்கள் தாண்டி இமயம் கண்டோம்
விண்ணில் பறந்து நிலவை பிடித்தோம்
அறிவியல் கற்று அணுவை பிளந்தோம்
மருத்துவம் கற்று மானிடம் காத்தோம்
ஜகமேம்பட உலகாண்டிட அரசியல் கண்டோம்-இன்று
காரிருள் போக்கும் ஞாயிறாய் எழுவோம்
அலைகடலென திரண்டிடுவோம்!அனுதினமும் உழைத்திடுவோம்!
ஊழ்வினை காட்டி பெண் வாழ்வினை அழிக்கும்
மூடர்தன் வாழ்வினை வாள்முனை கொண்டழிப்போம் !
மதங்கள் கடந்து மனிதம் செய்வோம்!
மொழிகள் கடந்து நேசம் செய்வோம்!
அன்பை கொண்டு ஆட்சி செய்வோம்!
நம்மை கொண்டு புதுஉலகம் செய்வோம்!-நாளை..........
1 கருத்து:
உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்
பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/
கருத்துரையிடுக