இந்தியர்கள் உண்மையாகவே
‘பெருமை’ப்படலாம்!

அதேபாணியில் “கோல்கேட்”
(COALGATE) என்றால் ‘நிலக்கரி ஊழலுக்கு’ செல்லப்பெயர். கோல்கேட் என்றவுடன் கூடவே ‘கனிம
ஊழல்’, இந்தியா, மன்மோகன்சிங் என்ற இணைப்பான்களையும் கணினியும், கணினி மூலம் சேகரமான
அகராதிகளும் காட்டும். மன்மோகன் ‘வரலாற்று நாயகராகப்’ பதிவு செய்யப்பட்டு விடுவார்!
இந்தியாவின் அனைத்து
கார்டூனிஸ்ட்டுகளுக்கும் ‘தீனி’ கிடைத்து விட்டது! இந்தியப் பிரதமர் பற்றிப் போடாத
கார்டூன்படமில்லை ஆனாலும் டாக்டர் மன்மோகன் சிங் அசரவில்லையே!.....வழக்கம்போல். ஆனால்
இது சிரிக்க வேண்டிய விஷயமில்லை. கவலைப்படவேண்டிய ஆழமான விஷயம்.
மாநில அரசுகளுக்கும்
தனியார் முதலைகளுக்கும் மத்திய அரசின் நிலக்கரி ஒதுக்கீட்டில் ஜூலை 2004 முதல் வெளிப்படையாக
தெரிவிக்கப்படாதது புதைக்கப்பட்டு கிடக்கும் மர்மங்கள் இந்திய கண்ட்ரோலர்/ஆடிட்டர்
ஜெனரலையே ஆட வைத்து விட்டது! 142 நிலக்கரி ப்ளாக்குகள் ஒதுக்கீட்டில் தனியார் அடித்த
கொள்ளை லாபத்தைக் கேட்டால் தலைசுற்றும். அதாவது,ரூ.1.86 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு!
விவரங்கள் வெளிப்படையாகவும் இல்லை;நியாயமாகவும் இல்லை. ஏலப்போட்டி முறையாக நடத்தப்படாததே
இந்த முறைகேட்டுக்குக் காரணம். அதற்கான வழிகாட்டுதல்களும் இல்லை. பிரதமர் டாக்டர் மன்மோகன்
சிங்தான் நிலக்கரித் துறைக்குப் பொறுப்பு என்னும்போது இன்னும் திடுக்கிட வைக்கிறது.
கனிமவளத்தைக் கொள்ளை
அடிக்கும் தனியார் நிறுவனங்கள் பற்றி பகிரங்கமாக பாராளுமன்றத்தில் விசாரிக்க வேண்டும்
என்று இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறும்போது பாரதீய ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தில்
இதை விசாரிக்க இடம்கொடுக்காமல் ரகளை செய்து வெளிநடப்பு செய்கின்றனர். விசாரணை வந்தால்
பா.ஜ.க காலத்திலிருந்தே விசாரிக்க வேண்டி வருவதால் இதை மழுப்ப அவர்கள் வெளிநடப்பு நாடகத்தை
அரங்கேற்றுகிறார்கள். கர்நாடகத்தில் நடைபெற்று வரும் மெகா ஊழல்கள் உட்கட்சிப் பூசலில்
முடிந்து முடைநாற்றமடிக்கிறது.

2ஜி ஊழல் ரூ.1.76
லட்சம் கோடி என்றால்,அதைவிடவும் கூடுதல் இழப்பை தேசம் நிலக்கரி ஊழல் மூலம் சந்தித்துக்
கொண்டிருக்கிறது. நிலக்கரி தேசியமயமாக்கல் சட்டத்தை மாற்ற இயலாது ‘புறக்கடைவழியாக’
நிலக்கரித் துறையையும் தனியார்மயமாக்க நினைக்கும் மத்திய அரசின் வஞ்சத்தனம் இதில் வெளிப்படுகிறது.
பொதுமக்கள் அக்கறையுடன் இதை கூர்ந்து கவனிக்க வேண்டும். மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும்
அரசியல் கூடாது என்று பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்பரேட் நிறுவனங்களும் போதிப்பதன்
ரகசியம் இதுதான். அதாவது இந்த “ஊழல் அரசியல்” குட்டு வெளிப்பட்டு விடும் என்ற ‘போபியாதான்’!
“அண்ணன் எப்போது
சாவான்….திண்ணை எப்போது காலியாகும்” என்ற பழமொழியைப் பெரிதும் நம்பியிருந்த பா.ஜ.க.வுக்குப்
பலத்த அடி!



பத்தாண்டுகள் தாமதமானாலும்
கூட, சோர்வடையாது போராடி இத்தீர்ப்பு வெளியாவதற்கு இடதுசாரிக் கட்சிகள், மனித உரிமை
ஆர்வலர்களான டீஸ்டா செடல்வத் (பெஸ்ட் பேக்கிரி விஷயத்தை வெளிக் கொண்டு வந்தவர்) ஹர்ஷ்
மந்தர் உள்ளிட்டோர்,”பைனல் சொலூஷன்” (இந்த ஆவணப் படம்தான் குஜராத் 2002 இனக்கலவரம்
நடந்த பின் உடனடியாக, பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்க் கதைகளைப் பதிவு செய்தது. பா.ஜ.க.
தலைமை வகித்த மத்திய அரசு இப்படத்துக்குத் தடை விதித்தது. ஆனால், சளைக்காது இயக்குனர்
ராகேஷ் ஷர்மா இதை உலகத் திரைப்பட விழாக்களில் திரையிட்டு உண்மையை உணர்த்தியதால் சங்கப்பரிவார்
அமைப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைத்து வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டது.
UPA அரசு தடையை
விலக்கி இப்படத்துக்கு ஜனாதிபதி விருது வழங்கியது.)

(நன்றி : BANK
WORKERS UNITY/SEP’12 ISSUE)
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக