திங்கள், 10 அக்டோபர், 2011

அஜீ(ரணம்)



தன் வயிற்றைக் காயவைத்து......



தன் காலை சேற்றில் வைத்து......



என் தட்டில் சோற்றை வைத்தவன்



தற்கொலை செய்து கொண்டான்!!!!!



என்னும் செய்தியை



தொலைக்காட்சியில் பார்த்தபடியே



நான் சோற்றை



சுவைத்துக் கொண்டிருந்தேன் - நேற்று



என்பது ஞாபகம் வந்து



தொலைத்தது - இன்று



மருத்துவர் என்னை பரிசோதித்தபடியே



“எல்லாம் அஜீரணக்



கோளாரால் வந்தது....”என்று



சொல்லி மருந்து கொடுத்தபோது.






3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அருமை...

vimalanperali சொன்னது…

வணக்கம்ண்ணே/நல்ல கவிதை வாழ்த்துக்கள்.அஜீரணங்கள் நிறைந்துபோன சமூகத்தில் இதுமாதிரி கவிதைகளும்,படைப்புகளும் தேவைதானே?

பெயரில்லா சொன்னது…

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..