வெள்ளி, 29 ஏப்ரல், 2011

என் கவிதைகள்...

பொய் சொல்லும் கண்கள்….


முகம் பார்க்கும் கண்ணாடி

முன் நின்று கொண்டு....

இனிமேல் பொய்கள் பேசுவதில்லை

என சபதமேற்றுக் கொண்டேன்

என் கண்கள் பேசும்

பொய்கள் புரியாமல்!


நிலையான கண்ணீர்


கண்ணீர் என்பது…..

துக்கத்தின் குறியீடா…?

ஆனந்தத்தின் வெளிப்பாடா…?

தெரியவில்லை-ஆனால்

ஆனந்தத்தின் ஆரம்பமும்

துக்கத்தின் முடிவும்

கண்ணீரில் நிலைக்கிறது.



விருந்தோம்பல்

வேண்டப் படாதவன்

விரும்பத் தாகத நேரத்தில்

வீட்டிற்கு வந்து விட்டால்

விடை சொல்ல வழியின்றி

விசாரிப்புகளில் துவங்குகிறது…..

”விரும்பா” விருந்தோம்பல்.



பிரியாவிடை

அவள் என்கைகள் பற்றி

கண்கள் பனிக்க கெஞ்சினாள்….

நான் நெஞ்சம் இறுக்கி

என்னை அவளிடமிருந்து

விடுவித்துக் கொண்டு

அவளுக்கு கண்ணீராவது

நிலைக்கட்டும் என எண்ணியபடி….

வந்துவிட்டேன்

மீளா துயில் கொள்ள!

கருத்துகள் இல்லை: