புதன், 15 ஜூலை, 2009

வாங்க...சிரிங்க...


சமீபத்தில் நான் ரசித்து படித்த சில குறுஞ்செய்திகள்......இந்த பதிவின் நோக்கம் இதை படிப்பவர்களை சிரிக்க வைப்பது மட்டுமே அதனால் இதில் தத்துவார்த்த குற்றங்களை கண்டுபிடித்து யாரும் கெட்ட வார்த்தையில் பின்னூட்டம் போட வேண்டாம்...

***ஆதாமும்,ஏவாளும் சீனர்களாக பிறந்திருந்தால் என்னவாகியிருக்கும்...?

நாம் இன்னும் ”ஏதேன்” தோட்டத்தில் தான் வாழ்ந்திருப்போம்.ஏனென்றால் அவர்கள் பழத்தை விட்டு விட்டு பாம்பை தின்றிருப்பார்கள்.

***தேன் சொன்னது,” நான் தான் இந்த உலகத்திலே அதிகம் சுவை படைத்தவன்”

கடவுள் சிரித்தவாறே பதிலுரைத்தார்,”அவசரப்படாதே! நீ இன்னும் இந்த குறுஞ்செய்தியை படிப்பவரை பார்க்கவில்லை அதனால் தான்
இப்படி சொல்கிறாய்..”என்றார்.
( நீதி: கடவுளும் சில சமயங்களில் பொய் சொல்வது உண்டு...)

***ஒரு குட்டிச் சாத்தான் என்னிடம் ,” நான் யாரையாவது தொந்தரவு செய்ய வேண்டும்.”என்றது.

நான் உன் பெயரை சொன்னேன்.அது ஓங்கி என் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னது,” நாங்கள் எங்கள் தலைவரிடம் அப்படி
விளையாடுவதில்லை..” என்று.

***ஓர் அற்புதமான வாக்கியம்.... நெடுஞ்சாலை பெயர் பலகையில் இப்படி இருந்தது.,”மிஸ்டர்.லேட் என்பது லேட்.மிஸ்டர் என்பதை விட
சிறந்தது.” அதனால் மித வேகம் மிக நன்று...

***கண்டக்டர்: டிக்கெட் பரிசோதகர் வருகிறார்...எல்லோரும் அவரவர் டிக்கெட்டை காண்பியுங்கள்.

மாணவ பயணி: முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல சார்.போன ஸ்டாப்ல தான் என்னோட டிக்கெட் இறங்கி போச்சு.

***மனைவி:என்னங்க! ”பின்னாடி FIGURE இருந்தா கண்ணு தெரியாதா”..ன்னு லாரிகாரன் உங்கள திட்டிட்டு போறான். நீங்க சிரிக்கிறீங்க?

கணவன்:பின்ன சிரிக்காம என்ன பண்றதாம்.உன்னை போய் FIGURE ன்னு சொல்றானே குருட்டுப் பய....

***ஒரு சர்தார்ஜியிடம் நேர்முக தேர்வின் போது......

மேலாளர்: உங்களது பிறந்த தேதி என்ன?
சர்தார்ஜி : ஏப்ரல் 25ஆம் தேதி.

மேலாளர்: எந்த வருடம்?
சர்தார்ஜி : என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி இது...ஒவ்வொரு வருடமும் தான்.

கடைசியாக இரு அஜால் குஜால் குறுஞ்செய்திகள்.......

*** 90 வயது முதியவர் ஒருவர் மருத்துவரிடம் வருகிறார்.....

முதியவர்:ஐயா! இந்த வயதில் நான் எந்த கோணத்தில் உடலுறவு கொள்வது நல்லது?

மருத்துவர்: நாய்கள் செய்வது போல்.....(அவர் முடிக்கும் முன்பு)

முதியவர்:அதாவது பின்னாலிருந்தா...?

மருத்துவர்:இல்லை இல்லை... நாய்களை போல் என்றால்....அவைகளை முகர்ந்து விட்டு மட்டும் செல்வதே நல்லது என்று சொல்ல
வந்தேன்.

***குற்ற உணர்ச்சியின் உச்ச கட்டம் எது...?
இரவு உறக்கத்தில் மனைவியின் உளறல்...”சீக்கரம் என் புருஷன் வந்திட்டார்....”
பக்கத்தில் படுத்து இருந்தவர் அவசரமாக ஜன்னல் வெளியே குதித்து விட்டு...”ஐயோ! இது என்ன மடத்தனம் பக்கத்திலிருந்தது என்
மனைவியல்லவா...”என்று தாமதமாக உணர்வது.

4 கருத்துகள்:

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

பதினெட்டு முறை சிரித்தேன் தல

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

ஓட்டுக்கள் போட்டாச்சு

டவுசர் பாண்டி சொன்னது…

அல்லா மேட்டரும் சோக்கா , கீதுபா, ராவா ரவ சல்பேட்டா உட்டுகின மேரி கீது ,கலக்கு தலீவா !!!

Unknown சொன்னது…

நன்றி சுரேஷ்.டவுசர் பாண்டி அண்ணாத்தே!தாங்ஸ் பா...