பறவை போல் இருக்கிறாய்
இரவெல்லாம் பறக்கிறாய்
நெருங்கினால் எரிகிறாய்-
நீ யாரோ?
புணரும் வானில்
தரிக்கிறாய்
கரையில் மோதும்
கடலின் அலையில்
எழுகிறாய்
மலையில் வீசும்
தென்றல் காற்றில்
மலர்கிறாய் - நீ யாரோ?
என்னை துரத்தும்
பொழுதிலே
உன்னை தொலைத்து
விடுகிறாய்
எனக்குள் இருக்கும்
உன்னை
வெளியில் தேட சொல்கிறாய்
காற்றின் கரங்கள்
பற்றியிழுக்க
மறுந்து மீண்டும்
இணைகிறாய்- நீ யாரோ?
மரணம் வீழ்த்தி
பிறக்கிறாய்
மீண்டும் மீண்டும்
வருகிறாய்
உறங்கும் போதும்
வருகிறாய்
உறங்க விடாமல்
தடுக்கிறாய்
விழித்துக் கொண்டால்
மடிகிறாய்
மடிந்தும் மீண்டும்
துளிர்கிறாய்- நீ யாரோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக