வியாழன், 16 ஏப்ரல், 2009

இலங்கைத் தீவு.....


ஆம்!இலங்கை இன்றும் தீவு தான்...
நான்கு புறமும் தமிழர்களின்
கண்ணீர் சூழ்ந்து இருப்பதால்....

!தமிழினமே!...
உங்கள் செவிகள் விழிப்புடன் உள்ளதா?

நாங்கள் பள்ளிக்கூடங்கள் கேட்கவில்லை...
கல்வி கற்பதற்கு
நாங்கள் வேலைவாய்ப்பு கேட்கவில்லை...
ஊதியம் பெறுவதற்கு
நாங்கள் நீதிமன்றங்கள் கேட்கவில்லை...
ஞாயம் பெறுவதற்கு
நாங்கள் சாலைகள் கேட்கவில்லை...
பயணம் செய்வதற்கு
நாங்கள் ஆலயம் கேட்கவில்லை..
வ்ழிபாடு செய்வதற்கு
நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்...
அது... போர் நிறுத்தம்!-அதுவும்
நாங்கள் வாழ்வதற்கு கேட்கவில்லை...
மடிந்த எம் உறவுகளை நினைத்து
அமைதியாய் அழுவதற்கே!


மரண வலி!மரண வலி!-என்றார்கள்
நாமும் நினைத்தோம் 'மரணம்' வலிக்கும் என்று...
ஆனால் இப்போது வாழும் போதுதான் புரிகிறது
'வலி' மரணித்தவருக்கு அல்ல....என்று.


பாவத்தின் சம்பளம் 'மரணம்'-என்றார்கள்
ஆனால் எம்மக்களுக்கோ....
'மரணம்' வரமானது வாழ்க்கை...........?


இப்படி இறந்தவர்கள் பிணமாய்.....மிஞ்சி
இருப்பவர்களோ நடை பிணமாய்...
என்று வாழ்ந்து வரும் நம்மக்களுக்கு செய்வதற்க்கு
நம்மிடம் ஒன்று உள்ளது.
அது.... நமது நாடாளுமன்ற தேர்தல்!

இங்கு அரசியல் பிழைத்தோருக்கு அறம் குற்றமாகும்!
ஆனால் நமக்கோ!.....அது ஆயுதம்! நம் மக்களை மீட்கும் ஆயுதம் .

தேர்தல் அன்று அனைவரும் வாக்கு சாவடிக்கு செல்வோம்
49 !விற்கு வாக்களிப்போம்...
காரணம்....?அங்கே எம் மக்கள் சாக இங்கே எமக்கு சனநாயகம் வேண்டாம்!-என்று ஒன்றாய் முழங்குவோம்!

வேண்டும்!வேண்டும்!அமைதி மலர.....போர் நிறுத்தம் வேண்டும்!

2 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

\\மடிந்த எம் உறவுகளை நினைத்து
அமைதியாய் அழுவதற்கே!//

the real pain

Unknown சொன்னது…

மாமா நம் வலிகளுக்கு மருந்து......?