வியாழன், 14 மே, 2015

வானமாகிப் போனவள்...

என் சிறகுகளின் வண்ணங்களால்
அறியப்பட்டவன் – நான்!
என் சிறகுகளின் வண்ணங்களால்
கவரப்பட்டவள்- அவள்!
நான் அவளுக்குரியவன் ஆனேன்…
அவள் என் இறகுகள் ஒவ்வொன்றாய்
கேட்கத் துவங்கினாள்….
நானும் பரிசளிக்கத் துவங்கினேன்.
என் இறகுகள் எல்லாம் உதிர்ந்து விட்டன….
அவள் என் வானமாகிப் போனாள்!!!!

1 கருத்து:

vimalanperali சொன்னது…

போகட்டுமே,என்ன இப்பொழுது,,,,?